தமிழகத்தில் இன்று மேலும் 1,134 பேருக்கு கொரோனா பாதிப்பு- 12 பேர் பலி
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1,134 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 12 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியை தொடும் நிலையில் உள்ளது. இன்றைய நிலையில் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 99,78,769. மேலும் 95,20,760 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தும் உள்ளனர்.

தமிழகம் 4-வது இடம்
இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,44,834 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திராவுக்கு அடுத்ததாக 4-வது இடத்தில் தமிழகம் உள்ளது.

இன்று 1,134 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று 74,957 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 1,30,12,168 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,04,650 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 12 பெஎர் பலி
இன்று மட்டும் தமிழகத்தில் மொத்தம் 12 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 11,954.

1,170 பேர் டிஸ்சார்ஜ்
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 1,170. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7,82,915.

சென்னையில் 341 பேருக்கு பாதிப்பு
தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் அதாவது ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 9,781 மட்டும். மாவட்டங்களைப் பொறுத்தவரையில் சென்னையில் இன்று மேலும் 341 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கோவையில் 115; செங்கல்பட்டில் 69; திருவள்ளூரில் 51 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது.












Click it and Unblock the Notifications