தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு- இன்று 1,181 பேருக்கு தொற்று உறுதி
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று மட்டும் 1,181 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 4-வது இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் அண்மைக்காலமாக கொரோனா தொற்று பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 1,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,02,342 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 12 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 7 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 5 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 11,931.
தமிழகத்தில் இன்று 1240 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 7,80, 531 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் தற்போதைய நிலையில் 9,880 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் சென்னையில்தான் இன்று அதிகபட்சமாக 344 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து கோவையில் 111 பேருக்கும் செங்கல்பட்டில் 74 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.