Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிலம், வீடு உட்பட சொத்துக்களை பெண்கள் பெயரில் பதிந்தால், முத்திரை தீர்வை விலக்கு தேவை: பெயிரா பளிச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக நிதித்துறை பட்ஜெட்டில், பெண்கள் பெயரில் சொத்துக்களை வாங்கினால் ஒரு சதவிகிதம் முத்திரைத் தீர்வை குறைவு என சலுகை வழங்கி, சட்டசபையில் அறிவித்து வெளியிட்டுள்ள திட்டத்தினை பெயிரா மனம் திறந்து பாராட்டி வரவேற்றுள்ளது. ஆனால், புதுச்சேரியில் நடைமுறையில் உள்ளதுபோல, தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் பெண்கள் பெயரில் சொத்துக்களை வாங்கினால் முத்திரைத் தீர்வையில் 50% விலக்கு அளிக்க வேண்டும்" என்று புதிய கோரிக்கை ஒன்றை பெயிரா எழுப்பியிருக்கிறது.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஹென்றி தமிழ்நாடு அரசின் புதிய திட்டத்திற்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதியிருக்கிறார்.. அந்த கடிதத்தில் உள்ளதாவது:

Registration Department Women properties Stamp duty charges

"அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா மாநாடு கடந்த 05.01.2025 அன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பெண்கள் பெயரில் சொத்துக்களை வாங்கினால் அண்டை மாநிலமான புதுச்சேரியை போன்று முத்திரைத் தீர்வையில் சலுகை வழங்க வேண்டும் என நிறைவேற்றப்பட்டு அரசுக்கு (பதிவுத்துறைக்கு) தீர்மானங்கள் மற்றும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

முத்திரைத் தீர்வை

அதில், கோரிக்கை எண். 70ல் குறிப்பிட்டுள்ள தீர்மானத்தை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொண்டு, அதனை நிறைவேற்றிடும் வகையில், இன்று தமிழக சட்டப் பேரவையில் தமிழ்நாடு முதல்வரின் நடவடிக்கையின் பேரில், நிதித்துறை பட்ஜெட்டில் பெண்கள் பெயரில் சொத்துக்களை வாங்கினால் ஒரு சதவிகிதம் முத்திரைத் தீர்வை குறைவு என சலுகை வழங்கி, சட்டசபையில் அறிவித்து வெளியிட்டுள்ள திட்டத்தினை மனம் திறந்து பாராட்டி வரவேற்று, தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தான பத்திரம், விற்பனை, பரிமாற்றம்

மேலும் புதுச்சேரி அரசு, இந்திய முத்திரைச் சட்டம், 1899ன் கீழ், விற்பனை, பரிமாற்றம் அல்லது தானப்பத்திரம் மூலம் சொத்துக்களை வாங்கும் பெண்களுக்கு 50% சதவீதம் முத்திரைக் கட்டணத்தை விலக்கு அளிக்க திட்டமிட்டு, கடந்த 17.12.2004 தேதியிட்ட அறிவிப்பு எண்.8834/Rev-C3/2004 இன் மூலம் இரண்டு நிபந்தனைகளுடன் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

அதில் ஒரு சொத்தை பெண் ஆணுடன் (ஆண்களுடன்) கூட்டாக சொத்தினை வாங்கினால், மேற்கூறிய முத்திரைத் தீர்வை சலுகை பொருந்தாது எனவும், மேற்கூறிய சலுகையைப் பெறும் பெண் சொத்தினைப் பதிவு செய்த நாளிலிருந்து 5 ஆண்டுகள் வரை (அதிகாரம் பெற்ற முகவர் மூலம் உட்பட) எந்த வகையிலும், எந்தவொரு ஆணுக்கும் ஆதரவாகவோ, தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ, அத்தகைய சொத்தை பராதீனம் (விற்பனை) செய்யக் கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

50% முத்திரை தீர்வு

அதுமட்டுமல்ல, இந்த நிபந்தனையை மீறி ஒருவேளை ஐந்து ஆண்டுகளுக்குள் அந்த சொத்தை விற்க நேரிட்டால் அந்த பெண் பயனாளி எந்த வட்டியும் இன்றி மீதியான 50% முத்திரைத் தீர்வை தொகையை அரசுக்கு செலுத்திய பிறகு தான், ஐந்து ஆண்டுகளுக்குள் அத்தகைய சொத்தைப் பராதீனம் செய்யலாம் என்றும், 31.08.2009 தேதியிட்ட புதுச்சேரி அரசு அறிவிப்பின்படி, மேற்கூறிய கட்டணச் சலுகை, புதுச்சேரியில் வசித்துவரும் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அந்த அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
மேற்கண்ட நிபந்தனைகளையும் சலுகையையும் தான் சுட்டிக்காட்டி அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கையை முன் வைத்திருந்தது. ஆனால் அரசு முதல் கட்டமாக பெண்களின் பெயரில் சொத்துக்களை வாங்கினால் ஒரு சதவீதம் முத்திரை தீர்வை என்கிற திட்டத்தை சட்டசபையில் இன்று அறிவித்திருக்கிறது.

பெண்களின் பாதுகாப்பு, கண்ணியம், கௌரவம்

மேலும் கடந்த மார்ச் 8, 2025 இல் சர்வதேச மகளிர் தினத்தில், பெண்களுக்கு எதிர்கால பாதுகாப்பும், கண்ணியமும், கௌரவமும் அதிகரிக்கும் வகையில் மகளிர் பெயரில் சொத்துக்களை வாங்கினால் அவர்களுக்கு 50 சதவீதம் முத்திரைத் தீர்வை சலுகை வழங்கிட வேண்டும் என மேற்கண்ட அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பில் அரசுக்கு கோரிக்கையாக முன் வைத்தது.

அரசு இதனையும் கவனத்தில் கொண்டு, சிறிய மாநிலமான புதுச்சேரியிலேயே நிரந்தரமாக இருப்பிடம் கொண்ட பெண்கள் பெயரில் மட்டும் தனிப்பட்ட முறையில் சொத்துக்களை வாங்கி, அவர்கள் ஐந்து ஆண்டுகள் வரை எந்தவித பராதீனமும் செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு முத்திரை தீர்வையில் 50% சதவிகிதம் விலக்கு அளிப்பது போன்று, தமிழகத்திலும் வழங்க வேண்டும்.

முத்திரைத் தீர்வையில் 50% விலக்கு

தமிழ்நாடு முதல்வர், தாய் உள்ளத்தோடு, புதுச்சேரியின் திட்டத்தை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, முத்திரைத் தீர்வை விலக்கு பெற பத்து லட்சம் வரை மதிப்புள்ள சொத்துக்களுக்கு மட்டும் என்கிற வரம்பினை நிர்ணயிக்காமல், தமிழகத்திலும் நிரந்தரமாக வசிக்கும் பெண்கள் பெயரில் சொத்துக்களை வாங்கினால் அவர்களுக்கும் முத்திரைத் தீர்வையில் 50% விலக்கு அளிக்கும் வகையில், தாங்கள் நடவடிக்கையை மேற்கொண்டு உரிய வழிவகை செய்ய வேண்டும்" என அந்த கடிதத்தில் எழுதியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+