24 மணி நேரத்தில் 10 செயின் பறிப்பு சம்பவங்கள்.. தலைநகர் சென்னையை அலற விடும் கொள்ளையர்கள்
சென்னை: தமிழகத்தின் தலைநகரான சிங்கார சென்னையில் 24 மணி நேரத்திற்குள், அடுத்தடுத்து 10 இடங்களில் பெண்களிடம் செயின் பறித்த குற்றசம்பவங்கள் நிகழ்ந்திருப்பது பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தேனாம்பேட்டை சீத்தையம்மாள் காலனியில் நடந்து சென்ற பெண் ஒருவர் கழுத்தில் அணிந்திருந்த செயினை இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இருவர் பறித்து னெ்றனர்.

இதனை சற்றும் எதிர்பாராத பெண் கீழே விழுந்து படுகாயடைந்தார் இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
இருசக்கர வாகனத்தை இயக்கியவன் ஹெல்மெட் அணிந்திருந்தான். ஆனால் பின்னால் அமர்ந்து செயினை பறித்தவனோ, முகத்தை மறைக்காமல் தைரியமாக செயினை பறித்து சென்றான்.
இதே போல கோட்டூர்புரம் ஏரிக்கரை சாலையில் சென்ற செல்வி என்ற பெண்ணை கொடூரமாக தாக்கி செயின் பறிக்க முயன்றுள்ளனர் வழிப்பறி கொள்ளையர்கள். நீண்ட நேரம் போராடியும் நகையை பறிக்க முடியாததால், செல்வியை ஆத்திரம் தீர சரமாரியாக தாக்கி விட்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.
கோட்டூர்புரத்தோடு முடிந்துவிடவில்லை செயின் பறிப்பு நிகழ்வுகள். ராயப்பே்டையில் ஜெயலட்சுமி, திருவல்லிக்கேணியில் சுதாதேவி, மயிலாபூரில் சாந்தா, பள்ளிக்கரணையில் பாலம்மாள், எழும்பூரில் மேரி, தேனாம்பேட்டையில் கற்பகமணி, கொடுங்கையூரில் ரமணி, ஆதம்பாக்கத்தில் முத்துலெட்சுமி, திருமங்கலத்தில் கற்பகமணி என 24 மணி நேரத்தில் சென்னையில் 10 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.
இந்த செயின் பறிப்பு சம்பவங்களில் அடுத்தடுத்து ஒரே கும்பலே 4 இடங்களில் கைவரிசையை காட்டியுள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம், நகை கொள்ளையர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களாக செயின் பறிப்பு சம்பவங்கள் ஏதுமின்றி சென்னை காணப்பட்டது. இதற்கெல்லாம் சேர்த்து வைத்து முத்தாய்ப்பாக, ஒரே நாளில் 10 பெண்களிடம் செயின்களை பறித்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனனர் கொள்ளையர்கள்.
சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பின்னர் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் அமைதி பூங்கா, சிங்கார சென்னை என்று அரசு கூறும் தலைநகரின் பிரதான சாலைகளில், அதுவும் பட்டப்பகலில் செயின் பறிப்பு சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடைபெற்று வருவது பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications