அரசியல் சார்பு கூடாது: தமிழக ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் 10 அம்சங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய அதிரடியான தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நிறுத்தி வைத்தார்; ஜனாதிபதிக்கும் அனுப்பி வைத்தார்.

supreme court india tamilnadu rn ravi mk stalin

தமிழ்நாடு ஆளுநர் ரவியின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று நாட்டையே அதிரவைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்தது.

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த இன்றைய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:

- அரசியலமைப்பு படியே ஆளுநர் செயல்பட வேண்டுமே தவிர அரசியல் சார்போடு செயல்படக்கூடாது

- மாநில அரசின் ஆலோசனைகள் படியே ஆளுநர் செயல்பட முடியும்

- ஆளுநருக்கு என தனிப்பட்ட VETO அதிகாரம் இல்லை

- தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்புக்கு எதிரானது

- தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடுகள் நேர்மையானதாக இல்லை

- தமிழ்நாடு ஆளுநர் ரவி, சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்

- தமிழ்நாடு ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களுக்கு சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் ஒப்புதல்

- ஆளுநர் சட்டவிரோதமாக அனுப்பிய 10 மசோதாக்கள் மீதான ஜனாதிபதியின் நடவடிக்கைகள் ரத்து.

- சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்படுகிறது.

- மாநில அரசு நிறைவேற்றி அனுப்புகிற மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+