சஸ்பென்ஸ்.. கோர விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ்! பதிவு செய்த 101 தமிழர்கள் - கணக்கு இடிக்குதே
சென்னை: ஒடிசாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் பயணித்ததாக சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் தெரிவித்து இருக்கும் நிலையில் அவர்கள் நிலை என்ன என்று பார்ப்போம்.
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் இருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் சென்னை நோக்கி நேற்று வந்துகொண்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசேர் அருகே சென்றுகொண்டு இருந்த இந்த ரயில் விபத்தில் சிக்கியது.

ஸ்டேஷனரி பொருட்களை ஏற்றி வந்த சரக்கு ரயில் மற்றும் யஷ்வந்த்பூர் சூப்பர் ஃபாஸ்ட் ரயிலுடன் இந்த ரயில் மோதியதில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 280 ஐ தாண்டிவிட்டது. பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சென்னையை நோக்கி வந்த ரயில் என்பதால் இதில் தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமான பயணிகள் பயணித்திருக்கக் கூடும் என்பதால் மறுபக்கம் தமிழ்நாடு அரசு இதில் களமிறங்கி இருக்கிறது.
நேற்றே தமிழ்நாடு அரசு விபத்துக்குள்ளானவர்கள் குறித்த தகவல்களை அறிய உதவி எண்களையும் அறிவித்தது. அதன்படி, விபத்துக்குள்ளானவர்கள் குறித்த விபரங்களை அறிந்துகொள்ள 044 28593990, 94458 69843 ஆகிய அவசர உதவி எண்களை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என தமிழ்நாடு மீட்புக்குழு அறிவித்து இருந்தது.
அதேபோல் புதுச்சேரி அரசும் 1070, 1077, 0413 2251003, 2255996 ஆகிய உதவி எண்களை அறிவித்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த ரயில் விபத்து குறித்து பேட்டியளித்த சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ், ஒடிசாவில் விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் கொல்கத்தாவில் இருந்து சென்னை வர தமிழ்நாட்டை சேர்ந்த 101 பேர் முன்பதிவு செய்து இருந்தனர்.
இதில் 17 பேர் பயணம் செய்யவில்லை. 53 பேர் பாதுகாப்பாக இருக்கிறார்கள். 14 பேருக்கு காயம் ஏற்பட்டு இருக்கிறது. 9 பேரை தொடர்புகொள்ள முடியவில்லை." என்றார். கணேஷ் தெரிவித்த தகவலின்படி 17 பேர் பயணம் செய்யவில்லை என்றால் தமிழ்நாட்டை சேர்ந்த 84 பேர் பயணம் செய்துள்ளார்கள்.
காயமடைந்தவர்கள், பாதுகாப்பாக இருப்பவர்கள், தொடர்புகொள்ள முடியாதவர்களின் எண்ணிக்கையை கூட்டினால் 76 பேர் பற்றி மட்டுமே தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அப்படியென்றால் மீதம் உள்ள 8 பேரின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது. இதற்கிடையே உயிரிழந்தவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்படவில்லை என ஒடிசா சென்ற குழுவில் இடம்பெற்று இருக்கும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து பேட்டியளித்த அவர், "ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. ரயிலில் பயணித்தவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்றால், உறவினர்கள் ஒடிசாவிற்கு வர அறிவுறுத்தல்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
IT Jobs:சோழிங்கநல்லூரில் ஐடி வேலை.. சென்னை HCL அலுவலகத்தில் நாளை – நாளை மறுநாள் இண்டர்வியூ! -
உத்தரப் பிரதேசத்தில் கொழுந்துவிட்டு எரியும் தீ! சம்பள பிரச்சனையில் தொழிலாளர்கள் ஆவேசம்! -
சென்ட்ரல் வங்கியில் வேலைவாய்ப்பு.. மாதம் 1.20 லட்சம் சம்பளம்.. பி.இ முடித்தவரக்ளுக்கு வாய்ப்பு -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications