Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10, 12ம் வகுப்பு மாணவர்களே பொதுத் தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டும் - அன்பில் மகேஷ் உறுதி

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக பொதுத்தேர்வு எழுத வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார். மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதால் நேரடி பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த 2019 - 20ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. 1 முதல் 9ஆம் வகுப்பு வரை ஆல்பாஸ் போடப்பட்டது. கடந்த 2020 - 21 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

10th and 12th class students must write the board exam - Anbil Mahesh

ஜனவரி மூன்றாவது வாரத்தில் முதல் திருப்புதல் தேர்வும், மார்ச் கடைசி வாரத்தில் இரண்டாவது திருப்புதல் தேர்வும் நடைபெறும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் அச்சம் காரணமாக 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே போல தங்களுக்கும் நேரடி வகுப்பு ரத்தாகலாம் என்று 9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டினைப் போல இந்த ஆண்டும் ஆல்பாஸ் ஆகிவிடலாம் என்று மாணவர்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரடி பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று கூறியுள்ளார்.

நாடு முழுவதும் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதால் நடப்பாண்டு நேரடி பொதுத்தேர்வு நடைபெறும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியாக கூறியுள்ளார். இல்லம் தேடி கல்வித் திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+