ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு
சென்னை: தசரா மற்றும் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ரயில்வே துறை ஊழியர்களுக்கு 7வது ஆண்டாக இந்த ஆண்டும் 78 நாள்கள் சம்பளத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருக்கிறது,
ஆண்டு தோறும் தசரா மற்றும் தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் ரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தி அடிப்படையில் வெகுமதியாக போனஸ் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆறு ஆண்டுகளாக ரயில்வே ஊழியர்களுக்கு வெகுமதியாக 78 நாள் ஊதியத்தை போனஸாக மத்திய அரசு வழங்கி வந்தது.

அதன் தொடர்ச்சியாக, 7வது ஆண்டாக இந்த ஆண்டும் 78 நாள் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ரயில்வே துறையில் பணியாற்றும் 11 லட்சத்து 52 ஆயிரம் ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications