கொரோனா டேஞ்சர் ஜோனாக விஸ்வரூபமெடுக்கும் சென்னை ஐஐடி- மேலும் 11 பேருக்கு தொற்று- மொத்த பாதிப்பு 182
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த போதும் சென்னை ஐ.ஐ.டி.யில் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னை ஐஐடியில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை ஐஐடியில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டின் வட இந்திய மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளன.

அதேநேரத்தில் சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் மொத்தம் 4,974 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டன. இதன் முடிவுகள் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
சென்னை ஐ.ஐ.டி.யில் நேற்று வரை மொத்தம் 171 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது. சென்னை ஐ.ஐ.டியில் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது உருமாறிய கொரோனா வைரஸ் அல்ல என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனாவால் பாத்க்கப்பட்டோர் குணமடைந்து வருவதும் அதிகரித்து வருகிறது எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சென்னை ஐ.ஐ.டியில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் சென்னை ஐ.ஐ.டி.யில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 182 ஆக அதிகரித்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் கொரோனா பரவக் கூடிய மிகப் பெரிய அபாய பகுதியாக சென்னை ஐ.ஐ.டி. உருவெடுத்திருக்கிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பரவல் பதிவுகள் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications