மொத்தம் 13 பேர்.. விடிய விடிய ஓட்டை போட்ட போலீசார்.. திரண்ட மக்கள் கூட்டம்.. சென்னையில் பரபரப்பு
நகை கடையில் ஷட்டர் மூடிக் கொண்டதால் 13 பேர் சிக்கி கொண்டனர்
Recommended Video
சென்னை: மொத்தம் 13 பேர்.. ஷட்டர் மூடிக் கொண்டதால், அப்படியே லம்ப்பாக நகைக்கடைக்குள்ளேயே பெண் உட்பட இவர்கள் விடிய விடிய சிக்கி கொண்டார்கள்!
சென்னை அடுத்த தாம்பரம் அருகே செம்பாக்கத்தில் தனிஷ்க் என்ற நகைக்கடை செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு கஸ்டமர்கள் எல்லாரும் சென்றுவிட்ட பிறகு, கடையை மூடிவிட்டு வீட்டுக்கு கிளம்பலாம் என ஊழியர்கள் நினைத்தனர்.

அதற்காக கடையை மூடுவதற்கு ஒருசில நிமிஷங்களுக்கு முன்பாக அங்கிருந்த ஆட்டோமெட்டிக் ஷட்டர் திடீரென தானாகவே மூடிக் கொண்டது. அதனால் எலக்ட்ரானிக் பூட்டும் தானாகவே பூட்டிக்கொண்டது.
இதனால் கடையில் இருந்த பெண் ஊழியர்கள் உள்ளிட்ட 13 பேரும் அலறி விட்டனர். அந்த ஷட்டரை திறக்க முயற்சித்தாலும் அவர்களால் முடியவில்லை.. கடைக்குள்ளேயே வசமாக சிக்கிவிட்டனர்.
அதனால் ராத்திரி 11 மணிக்கு சேலையூர் போலீசாருக்கு தகவல் சொன்னார்கள். இதையடுத்து, போலீசாரும், தீயணைப்பு துறையினரும் கடைக்கு வந்துவிட்டார்கள். தீயணைப்பு துறையினர் முயற்சித்தும் ஷட்டரை திறக்க முடியவில்லை. அதனால் வெல்டிங் மிஷின் வைத்துதான் ஓட்டை போட்டு அவர்களை வெளியே கொண்டு வர முடியும் என்று முடிவு செய்தனர்.
அதன்படியே ஒரு ஆள் வெளியே வரும் அளவுக்கு ஷட்டரை வெல்டிங் மிஷினால் ஓட்டை போட ஆரம்பித்தனர். இதுக்கே ராத்திரி முழுவதும் ஆகிவிட்டது. அந்தநேரத்தில் கடைக்குள் உள்ள நகைகள் திருடு போகாமல் இருக்க போலீசார் அதையும் ஒரு பக்கம் கண்காணித்து கொண்டே இருந்தனர். காலையில்தான் ஒவ்வொருத்தராக ஓட்டை வழியாக வெளியே வந்தனர்.
பிறகு அந்த ஓட்டையை சீரமைக்கும் பணி நடைபெற்றது. தீபாவளி டைம் என்பதால், கடைக்கு கஸ்டமர்கள் காலையில் சீக்கிரமாக வர ஆரம்பித்துவிட்டனர். ஷட்டரில் ஓட்டை போடப்பட்டிருந்ததாலும், போலீஸ்காரர்கள் கடையை சுற்றி நின்றிருந்ததாலும் வந்திருந்த கஸ்டமர்கள் பயந்து விட்டனர். திரும்பவும் ஏதாவது நகை கொள்ளையா என்று பதட்டம் ஆனார்கள்.. இவர்களை பார்த்து பொதுமக்களும் அங்கு வேடிக்கை பார்க்க திரண்டு வந்துவிட்டனர். அதனால் கொஞ்ச நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்!












Click it and Unblock the Notifications