எல்பிஜி தட்டுப்பாடு! சென்னையில் தனியார் கல்லூரிக்கு விடுமுறை! ஹாஸ்டலை காலி செய்ய சொன்ன நிர்வாகம்
சென்னை: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலியாக சென்னையை அடுத்த மதுரவாயலில் உள்ள எம்ஜிஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திற்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் ஆன்லைனில் பாடம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மதுரவாயலில் இயங்கி வருகிறது டாக்டர் எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம்! இந்த கல்லூரியில் ஏராளமானோர் மருத்துவம், பொறியியல் படிப்புகளை படித்து வருகிறார்கள். இதன் உரிமையாளர் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம்.

இவருக்கு சொந்தமாக மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. அது போல் அவரது சொந்த ஊரான ஆரணியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி, மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியனவும் இயங்கி வருகின்றன.
கடந்த இரு தினங்களாக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் வணிக சிலிண்டர் கிடைக்காததால் பல ஹோட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன. அது போல் பல்வேறு வெரைட்டி உணவு உற்பத்தியும் நிறுத்தியுள்ளன.
அது போல் டீ, காபி கடையில் போண்டா, வடை, பஜ்ஜி உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுவிட்டன. அது போல் டீ, காபி விலையும் அதிகரித்துள்ளது. இந்த சிலிண்டர் தட்டுப்பாடு கல்லூரி விடுதிகளிலும் எதிரொலித்துள்ளன.
சென்னை மதுரவாயலில் உள்ள எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் அங்குள்ள கேன்டீன்கள் இயங்க முடியவில்லை. இதனால் மாணவர்களுக்கு வரும் 25 ஆம் தேதி வரை கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை ஆன்லைனில் வகுப்பெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் விடுதிகளிலும் சிலிண்டர் இல்லாமல் உணவு தயாரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் ஹாஸ்டல் மாணவர்களை காலி செய்யுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அது போல் சில கல்லூரிகளில் வெரைட்டியான உணவு வகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஹாஸ்டலிலும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஹாஸ்டல் சாப்பாட்டை சாப்பிட்டு இளைத்து போன மாணவர்களுக்கு இது பேரிடியாக உள்ளது. சரி கேன்டீனில் சாப்பிடலாம் என்றால் அங்கும் நிறைய உணவுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் அவதியடைந்துள்ளனர்.
அது போல் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என நிலவி வரும் வதந்தியால் மக்கள் இரவு முழுக்க பெட்ரோல் நிலையங்களில் காத்திருந்து டேங்கை ஃபுல் செய்து வருகிறார்கள். கேஸ் சிலிண்டர் கேட்டும் ஏஜென்சிகளை நெருக்குகிறார்கள். ஹோட்டல் உரிமையாளர்களும் கேஸ் ஏஜென்சிகளுக்குச் சென்று வணிக சிலிண்டர் கேட்டு வாக்குவாதம் செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications