எல்பிஜி தட்டுப்பாடு! சென்னையில் தனியார் கல்லூரிக்கு விடுமுறை! ஹாஸ்டலை காலி செய்ய சொன்ன நிர்வாகம்
சென்னை: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலியாக சென்னையை அடுத்த மதுரவாயலில் உள்ள எம்ஜிஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திற்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் ஆன்லைனில் பாடம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மதுரவாயலில் இயங்கி வருகிறது டாக்டர் எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம்! இந்த கல்லூரியில் ஏராளமானோர் மருத்துவம், பொறியியல் படிப்புகளை படித்து வருகிறார்கள். இதன் உரிமையாளர் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம்.

இவருக்கு சொந்தமாக மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. அது போல் அவரது சொந்த ஊரான ஆரணியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி, மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியனவும் இயங்கி வருகின்றன.
கடந்த இரு தினங்களாக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் வணிக சிலிண்டர் கிடைக்காததால் பல ஹோட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன. அது போல் பல்வேறு வெரைட்டி உணவு உற்பத்தியும் நிறுத்தியுள்ளன.
அது போல் டீ, காபி கடையில் போண்டா, வடை, பஜ்ஜி உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுவிட்டன. அது போல் டீ, காபி விலையும் அதிகரித்துள்ளது. இந்த சிலிண்டர் தட்டுப்பாடு கல்லூரி விடுதிகளிலும் எதிரொலித்துள்ளன.
சென்னை மதுரவாயலில் உள்ள எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் சிலிண்டர் தட்டுப்பாட்டால் அங்குள்ள கேன்டீன்கள் இயங்க முடியவில்லை. இதனால் மாணவர்களுக்கு வரும் 25 ஆம் தேதி வரை கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை ஆன்லைனில் வகுப்பெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் விடுதிகளிலும் சிலிண்டர் இல்லாமல் உணவு தயாரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் ஹாஸ்டல் மாணவர்களை காலி செய்யுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அது போல் சில கல்லூரிகளில் வெரைட்டியான உணவு வகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஹாஸ்டலிலும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஹாஸ்டல் சாப்பாட்டை சாப்பிட்டு இளைத்து போன மாணவர்களுக்கு இது பேரிடியாக உள்ளது. சரி கேன்டீனில் சாப்பிடலாம் என்றால் அங்கும் நிறைய உணவுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் அவதியடைந்துள்ளனர்.
அது போல் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என நிலவி வரும் வதந்தியால் மக்கள் இரவு முழுக்க பெட்ரோல் நிலையங்களில் காத்திருந்து டேங்கை ஃபுல் செய்து வருகிறார்கள். கேஸ் சிலிண்டர் கேட்டும் ஏஜென்சிகளை நெருக்குகிறார்கள். ஹோட்டல் உரிமையாளர்களும் கேஸ் ஏஜென்சிகளுக்குச் சென்று வணிக சிலிண்டர் கேட்டு வாக்குவாதம் செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications