இந்தியா வருகை தந்த 15 இத்தாலி சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா வருகை தந்த இத்தாலி சுற்றுலா பயணிகளில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Recommended Video

    Total 28 COVID-19 cases in India|இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு... அதிர்ச்சி தகவல்

    சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உயிர் பலி உலக நாடுகளையும் தாக்கியுள்ளது. சீனாவில் புதிதாக 119 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சீனாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 80,270 ஆக அதிகரித்துள்ளது.

    15 Italian tourists in India test coronavirus positive, confirms AIIMS

    மேலும் சீனாவில் கொரோனாவில் பலியானோர் எண்ணிக்கை 2,981 ஆகவும் உயர்ந்துள்ளது. தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்த அச்சம் நிலவுகிறது.

    செளதியில் இருந்து பெங்களூரு வந்த பயணிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

    ஒடிஷாவின் பாரதீப் துறைமுகத்துக்கு சரக்கு கப்பலில் வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிந்தது. கடுமையான காய்ச்சல் மற்றும் தொண்டை எரிச்சலால் அவதிப்பட்ட அவர் கட்டாக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து மத்திய பிரதேசம் திரும்பிய 32 வயது ராணுவ அதிகாரி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர் இந்தூர் அருகே உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்த 21 பேரில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக மருத்துவ பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. இதனை எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் சாவ்லாவில் உள்ள இந்தோ திபெத் எல்லை போலீஸ் படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இதனிடையே கொரோனா தாக்குதலால் பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு உலக வங்கி 12பில்லியன் டாலர் நிதி உதவி அளிப்பதாக அறிவித்திருக்கிறது. தொழில்நுட்ப உதவி உள்ளிட்ட பல்வேறு அவசர தேவைகளுக்கு இந்த நிதி உதவியை உலக வங்கி ஒதுக்கியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+