தமிழகத்தில் 3-வது நாளாக 2,000-த்தை தாண்டியது- ஒரே நாளில் 2,115 பேருக்கு கொரோனா - 41 பேர் மரணம்
சென்னை: தமிழகத்தில் 3-வது நாளாக கொரோனா பாதிப்பு 2,000-த்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 2,115 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக மிக அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களாக ஒரே நாளில் 2,000-த்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

54,449 பேருக்கு பாதிப்பு
தமிழகத்தில் வெள்ளிக்கிழமையன்று 27.537 பேருக்கு பரிசோதனை செய்ததில் 2,115 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 54,449 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வெள்ளியன்று மட்டும் கொரோனாவால் 41 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 666 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் சென்னையில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

1630 பேர் இன்று டிஸ்சார்ஜ்
கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 1630 பேர் இன்று குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 30,271 ஆக உள்ளது. தமிழகத்தில் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது.

சென்னையில் மட்டும் 1322
மாவட்டங்களில் சென்னையில்தான் இன்றும் கொரோனா பாதிப்பு அதிகம். சென்னையில் இன்று மட்டும் 1,322 பேருக்கு கொரோனா உறுதியானது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது மொத்தம் 38,327 ஆக அதிகரித்திருக்கிறது. செங்கல்பட்டில் இன்று 95 பேருக்கு கொரோனா உறுதியானது.

திருவள்ளூரில் 85
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 85 பேருக்கு கொரோனா உறுதியானது. கடலூரில் 5; தருமபுரி-2; ஈரோடு-1; கள்ளக்குறிச்சி- 7; காஞ்சிபுரம்-39 என கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் பெரம்பலூர் தவிர அனைத்து மாவட்டங்களிலும் இன்று கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications