திமுக கூட்டணிக்கு வக்பு வாரிய முன்னாள் தலைவர் ஹைதர் அலி, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆதரவு
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தருவதாக வக்பு வாரிய முன்னாள் தலைவர் ஹைதர் அலி தெரிவித்துள்ளார். இதேபோல் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
சட்டசபை தேர்தலில் திமுக தலைமையில் பிரமாண்ட கூட்ட்டணி களம் காண்கிறது. இந்த கூட்டணியில் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய முஸ்லிம் கட்சிகளுக்கு மொத்தம் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக 3 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

முஸ்லிம் கட்சிகளுக்கு குறைவான இடங்கள் தரப்பட்டதாக அதிருப்தி நிலவியது. இடதுசாரிகள், மதிமுக, விசிக என அனைத்து திமுக கூட்டணி கட்சிகளுக்கும் இதே பாணியில்தான் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து தமிமுன் அன்சாரி தலைமையிலான மனிதநேய ஜனநாயக கட்சி, தொகுதிகள் பெறாமலேயே திமுக அணிக்கு ஆதரவை தெரிவித்தது.
இதேபோல் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தன. இந்த நிலையில் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் அதிருப்தி அணியை சேர்ந்த வக்பு வாரிய முன்னாள் தலைவர் ஹைதர் அலி சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்தித்து பேசினார். அப்போது திமுக கூட்டணிக்கு தமது ஆதரவை தெரிவித்தார்.
மேலும் திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மாநிலச் செயலாளர் எஸ்.என்.சிக்கந்தர், சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கிறோம்; நாங்கள் முன்வைத்த 20 அம்ச கோரிக்கைகளை வெற்றி பெற்றதும் நிறைவேற்றுவதாக ஸடாலின் உறுதி அளித்துள்ளார் என கூறினார்.












Click it and Unblock the Notifications