சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே 20 அடிக்கு திடீர் பள்ளம்... அதிர்ஷ்டவசமாக சேதம் தவிர்ப்பு..!
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே 20 அடி ஆழத்துக்கு தோன்றிய திடீர் பள்ளத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையை மிரட்டி வரும் நிவர் புயலுக்கு மத்தியில் மாநகரின் பெரும்பாலான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பல இடங்களில் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

இதனிடையே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே இரவு 8 மணியளவில் சாலையின் நடுவே பள்ளம் தோன்றியது. நொடிபொழுதில் தார்சாலை சிதைந்து பூமிக்குள் புதைந்தது. நில அதிர்வு ஏற்பட்டதை போல் உணர்ந்த அப்பகுதி மக்கள் மாநகராட்சிக்கும் காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
அடுத்த ஒரு சில நிமிடங்களில் அங்கு விரைந்த போலீஸார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் நடுவே பள்ளம் தோன்றியது குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். தொடர் மழை காரணமாக இது போன்ற பள்ளம் ஏற்பட்டதா அல்லது மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை காரணமாக இந்த பள்ளம் உருவாகியதா என ஆராய்ந்து வருகின்றனர்.
மேலும், பள்ளம் தோன்றிய போது அப்பகுதியாக யாரும் பயணிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த சாலையை சீரமைக்க இன்னும் ஒரு வாரகாலம் ஆகும் என்பதால் அதுவரை போக்குவரத்து மாற்றிவிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இப்போது ஏற்பட்டுள்ள பள்ளம் போன்று கடந்த ஓராண்டு முன்னர் சென்னை அண்ணா சாலையில் திடீரென பள்ளம் உருவாகியது குறிப்பிடத்தக்கது.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications