லோக்சபா தேர்தல் பாதுகாப்பு.. தமிழ்நாடு வந்த 25 கம்பெனி துணை ராணுவப்படை.. ஹை அலர்ட்
சென்னை: லோக்சபா தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாகவே பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக துணை ராணுவப்படையினர் தமிழகம் வந்துள்ளனர். துணை ராணுவ படையினரை தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 3 கம்பெனி மத்திய தொழில்பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று ரயில் மூலம் கோவை வந்தனர். ஒரு கம்பெனியில் 92 பேர் என மொத்தம் 276 பேர் வந்துள்ளனர். கோவை மாநகர், கோவை சரகம், சேலம் மாநகர் ஆகிய இடங்களுக்கு தலா ஒரு கம்பெனி துணை ராணுவ படையினர் பிரித்து அனுப்பப்பட்டனர்.

லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், முன்னதாகவே சட்டம் - ஒழுங்கு கண்காணிப்புக்காகவும், பாதுகாப்பை உறுதி செய்யவும், மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவும், துணை ராணுவ படையினரை மத்திய உள்துறை தமிழகத்துக்கு அனுப்புகிறது.
முதல்கட்டமாக தமிழகத்துக்கு 25 கம்பெனியை சேர்ந்த துணை ராணுவ படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். இதில், நேற்று 15 கம்பெனியை சேர்ந்த துணை ராணுவ படையினர் தமிழகத்துக்கு வருவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதல் கம்பெனி துணை ராணுவ படையினர் நேற்று முன்தினம் இரவே மங்களூருவில் இருந்து ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் வந்தனர். அவர்கள் புதுப்பேட்டையில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை 7 மணி நிலவரப்படி,சென்னைக்கு துணை ராணுவ படையை சேர்ந்த 2 கம்பெனி, ஆவடி, தாம்பரத்துக்கு தலா 1 கம்பெனி, கோவைக்கு 3 கம்பெனி என மொத்தம் 7 கம்பெனி வீரர்கள் வந்துள்ளனர். துணை ராணுவத்தினரை தேவைக்கேற்ப பல்வேறு பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இன்றைய தினம் 8 கம்பெனியை சேர்ந்த துணை ராணுவ படை வீரர்கள் மதுரை, சேலம், நெல்லை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல இருக்கின்றனர். எஞ்சியுள்ள 10 கம்பெனியை சேர்ந்த துணை ராணுவ படையினர் வரும் 7-ம் தேதி தமிழகம் வர இருக்கின்றனர். பல்வேறு நகரங்களுக்கு செல்லும் அவர்கள் தேர்தல்பணியில் ஈடுபடுவார்கள்.
லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்த பிறகே, அவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவார்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக தமிழகத்துக்கு 175 கம்பெனி வீரர்கள் வர உள்ளனர்.
இதற்கிடையே, சென்னையில் துணை ராணுவ படை வீரர்கள் தங்குவதற்கு 24 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 4 ஆயிரம் பேர் வரை தங்கும் வசதி உள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 3 கம்பெனி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று ரயில் மூலம் கோவை வந்தனர். ஒரு கம்பெனியில் 92 பேர் என மொத்தம் 276 பேர் வந்துள்ளனர். கோவை மாநகர், கோவை சரகம், சேலம் மாநகர் ஆகிய இடங்களுக்கு தலா ஒரு கம்பெனி துணை ராணுவ படையினர் பிரித்து அனுப்பப்பட்டனர்.
-
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications