100% எல்லாம் ஓவர்.. மெரினாவில் திறக்கப்படும் ஃப்ளூ ஃப்ளாக் கடற்கரை.. எல்லோருக்கும் அனுமதியா? பின்னணி
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் ப்ளூ ஃபிளாக் (Blue Flag) எனப்படும் நீலக்கொடி கடற்கரைக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அடுத்த வாரம் இப்பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.
மெரினா நீலக்கொடி கடற்கரை: துணை முதல்வர் திறந்து வைக்க திட்டம்
சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள இந்த நீலக்கொடி கடற்கரையை, இன்னும் சில வாரங்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நீலக்கொடி கடற்கரை வளாகத்தில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், மரக்கன்றுகள் நடப்பட்டு, விளையாட்டு பகுதி நிறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, மூங்கில் சாய்வு நாற்காலிகள், குப்பைத் தொட்டிகள் அமைக்கும் பணி, கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி மற்றும் தியானத்திற்கான மூங்கில் தளம் அமைக்கும் பணி போன்ற இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (GCC) கட்டுமானப் பணிகளை முடித்து, அடுத்தகட்டமாக தண்ணீர் பரிசோதனையை முடித்து வரைபடங்களுடன் கூடிய தகவல் பலகைகளை அமைத்து வருகிறது. இந்த கடற்கரையை பராமரிக்கும் ஒப்பந்தம் ₹6 கோடிக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் அண்ணா நீச்சல் குளம் அருகே உள்ள 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதி நீலக்கொடி மண்டலமாக மாற்றப்படவுள்ளது. இங்கு சாய்ந்த நாற்காலிகள், சிற்றுண்டிச்சாலை, உடற்பயிற்சி உபகரணங்கள், கண்காணிப்பு அமைப்பு மற்றும் நவீன நடைபாதைகள் போன்ற வசதிகள் ₹6 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட உள்ளன. வணிகர்கள் இங்கு கடைகள் அமைக்க அனுமதி இல்லை. மெரினா கடற்கரை முழுவதும் இதேபோன்று படிப்படியாக மறுசீரமைக்க GCC திட்டமிட்டுள்ளது. இந்த பணிகள் மே மாத இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ப்ளூ ஃபிளாக் சான்றிதழ்: மெரினாவுக்கு கிடைக்கும் அங்கீகாரம்
சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான மெரினா கடற்கரை, ப்ளூ ஃபிளாக் எனப்படும் சர்வதேச சுற்றுச்சூழல் சான்றிதழை பெற உள்ளது. இந்த சான்றிதழை பெறுவதற்கான டெண்டர் கிரேட்டர் சென்னை மாநகராட்சியால் வெளியிடப்பட்டுள்ளது. ப்ளூ ஃபிளாக் சான்றிதழ் என்பது தூய்மை, பாதுகாப்பு மற்றும் கடற்கரையின் தரம் போன்ற சர்வதேச தரநிலைகளை பூர்த்தி செய்யும் கடற்கரைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், "நீலக்கொடி கடற்கரை வளாகத்தில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மரக்கன்றுகள் நடப்பட்டு, விளையாட்டுப் பகுதி நிறைவடைந்துள்ளது. விரைவில் இப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்," என்று தெரிவித்தார்.
தற்போது, தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோவளம் கடற்கரை மட்டுமே நீலக்கொடி சான்றிதழ் பெற்ற கடற்கரையாக உள்ளது. தமிழ்நாடு அரசு ₹1,675 கோடி மதிப்பீட்டில் கடலோர மேம்பாட்டு திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னை மெரினா கடற்கரையை முழுமையாக மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய நிலையான கடலோர மேலாண்மை மையம் (NCSCM) இதற்கான விரிவான திட்ட அறிக்கைகளை (DPR) தயாரித்து வருகிறது.
கடலோர மேம்பாட்டு திட்டம்: தமிழ்நாடு அரசின் முயற்சி
தமிழ்நாடு அரசு, உலக வங்கி கடனுதவியுடன் ₹1,675 கோடி மதிப்பீட்டில் கடலோர மேம்பாட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் உள்ள கடலோர பகுதிகள் மேம்படுத்தப்படும். மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழக கடலோர பகுதிகளை சீரமைக்கவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு கடலோர மறுசீரமைப்பு இயக்கத்தின் கீழ் பல்வேறு முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அவற்றில் சில:
- நாகப்பட்டினம் மற்றும் சென்னையில் கடல் ஆமை பாதுகாப்பு மையங்கள் அமைத்தல்.
- மனோரா, தஞ்சாவூரில் சர்வதேச டுகோங் பாதுகாப்பு மையம் அமைத்தல்.
- பள்ளிக்கரணை பாதுகாப்பு மையம் மற்றும் சென்னையில் சதுப்பு நிலத்தை மீட்டமைத்தல்.
- சதுப்புநிலங்கள், கடல் புல் மற்றும் நீல கார்பன் தீர்வுகளை உருவாக்குதல்.
- மன்னார் வளைகுடா கரியாச்சல்லி தீவுகளில் அரிப்பு கட்டுப்பாடு மற்றும் பவள மறுசீரமைப்பு செய்தல்.
- நீலக்கொடி கடற்கரைகளை அமைத்தல்.
- கடல் பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைத்தல்.
- காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் ஸ்மார்ட் கடற்கரை கிராமங்களை உருவாக்குதல்.
- எண்ணூர் சிற்றோடை மீட்பு பணிகளை மேற்க்கொள்ளுதல்.
- கோவளம் கடற்கரை நீலக்கொடி சான்றிதழ் திட்டத்திற்கு தமிழகத்தின் முன்னோடி கடற்கரையாகும். இது தமிழக அரசின் ஆதரவுடன் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டது.
மெரினா
மெரினா கடற்கரையில் நீலக்கொடி கடற்கரைக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதன்மூலம், மெரினா கடற்கரைக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைப்பதோடு, சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு அரசின் கடலோர மேம்பாட்டு திட்டத்தின் மூலம் மாநிலத்தின் கடலோர பகுதிகள் மேம்படுத்தப்படும்.












Click it and Unblock the Notifications