தமிழகத்தில் 2-வது நாளாக 2,000-த்தை தாண்டியது- 2,141 பேருக்கு கொரோனா- மேலும் 49 பேர் மரணம்
சென்னை: தமிழகத்தில் 2-வது நாளாக வியாழக்கிழமையன்றும் கொரோனா பாதிப்பு 2,000-த்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் வியாழக்கிழமை மட்டும் 2,141 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நாள்தோறும் 1,000க்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமையன்று ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,000-த்தை தாண்டியது.
கொரோனா பரிசோதனை ரேபிட் டெஸ்ட் கிட் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தில் முடித்து வைப்பு
மொத்தம் 52,334 பேருக்கு பாதிப்பு
வியாழக்கிழமை ஒரே நாளில் மொத்தம் 2,141 பேருக்கு கொரோனா உறுதியானது. ஒரே நாளில் மொத்தம் 49 பேர் உயிரிழந்தும் உள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52,334 ஆகவும் கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை 625 ஆகவும் உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,017 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனையடுத்து தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டோர் எண்ணிக்கை 28,641 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் 37,070 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் மாவட்டங்களில் சென்னையில்தான் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாக உள்ளது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,373 பேருக்கு கொரோனா உறுதியானது. சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கையும் 37,070 ஆக உயர்ந்திருக்கிறது. சென்னையைத் தொடர்ந்து செங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு அதிகம். செங்கல்பட்டில் இன்று மட்டும் 115 பேருக்கு கொரோனா உறுதியானது. செங்கல்பட்டில் மொத்தம் 3,285 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
சென்னையில் 501 பேர் உயிரிழப்பு
சென்னையில்தான் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் மொத்தம் 625 பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர். சென்னையில் மட்டும் 501 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 2-வதாக செங்கல்பட்டில் 38 பேரும் திருவள்ளூரில் 32 பேரும் இறந்துள்ளனர்.
பிற மாவட்டங்களில் கொரோனா
சென்னை தவிர்த்த பிற மாவட்டங்கள் நிலவரம்: செங்கல்பட்டு - 115; கோவை- 23; கடலூர்- 17; தருமபுரி-2 ; திண்டுக்கல்- 2; ஈரோடு- 3; கள்ளக்குறிச்சி- 3; காஞ்சி-55; கன்னியாகுமரி 10; கரூர்-3 ; மதுரை- 9; நாகை- 9; நீலகிரி- 4; புதுக்கோட்டை- 6; ராமநாதபுரம்- 28; ராணிப்பேட்டை 18; சேலம்- 14; சிவகங்கை 15; தென்காசி 33; தஞ்சாவூர்-21; தேனி- 6; திருப்பத்தூர்- 4; திருவள்ளூர்-123; திருவண்ணாமலை 27; திருவாரூர்8; தூத்துக்குடி 26; நெல்லை- 19; திருப்பூர்- 4; திருச்சி- 14; வேலூர்- 55; விழுப்புரம்- 26; விருதுநகர்- 13.