உதயநிதியின் மாபெரும் பாய்ச்சல்.. 2 வது இளைஞரணி மாநில மாநாடு! மாற்றப்பட்ட தேதி அறிவிப்பு - எப்போது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெற இந்த திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாடு கனமழை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வரும் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு திமுக இளை­ஞ­ர­ணிச் செய­லா­ள­ராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்தபோது இளை­ஞ­ர­ணி­யின் முதல் மாநில மாநாடு நெல்லை நடை­பெற்­றது. இந்த நிலையில் இளைஞரணி 2 வது மாநில மாநாடை சேலத்­தில் கடந்த 2023 டிசம்பர் 17 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட உள்ளது. ஒரு­நாள் இது ஏற்பாடு செய்யப்பட்ட இது, திமுக இளைஞரணி செய­லா­ளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த மாநாடு நடைபெற திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் டிசம்பர் மாதம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக பெருமழை கொட்டித் தீர்த்ததால் 4 மாவட்டங்கள் வெள்ளக் காடாகின.

2nd State Conference of DMK Youth Congress which was scheduled on January 21


அந்த துயரம் துடைக்கப்படுவதற்குள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் வரலாறு காணாத அளவுக்கு கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாடு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் திமுக இளைஞரணி மாநில மாநாட்டிற்கான மாற்றியமைக்கப்பட்ட தேதியை வெளியிட்டு உள்ளது அக்கட்சித் தலைமை.

அதில் குறிப்பிட்டு உள்ளதாவது, “மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாடு வருகிற 21.01.2024 ஞாற்றுக்கிழமை அன்று சேலத்தில் நடைபெறும்.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. முன்னதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்த மாநாடு பற்றி தெரிவிக்கையில், “தேர்தல் களத்திற்கான பயிற்சிக் களமாக அமைய இருக்கும் இளைஞரணியின் 2 வது மாநில மாநாட்டின் வெற்றி, அதனைப் பறைசாற்ற வேண்டும். நெல்லையில் நடந்த இளைஞரணியின் முதலாவது மாநில மாநாட்டின்போது, புதிய ஆத்திசூடியை வழங்கினார் முத்தமிழறிஞர் கலைஞர்.

அதில், கழகம் வில்லாம் நின் அணியே கணையாம் என்று எழுதியிருந்தார். களத்தில் பாய்வதற்குத் தயாராக இருக்கும் கணைகளாக இளைஞரணியினர் செயலாற்றி வருகிறார்கள். அவர்களுக்குத் துணை நிற்கவும், இந்தியா திரும்பிப் பார்க்கும் வகையில் மகத்தான வெற்றி மாநாடாக அமையவும் மாநாட்டுத் தலைவர் தம்பி உதயநிதி அழைக்கிறார்.” என்று ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த மாநாட்டு ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் அமைச்சர் கே.என்.நேரு கடந்த மாதம் இதுகுறித்து தெரிவிக்கையில், “இளைஞரணி மாநாடு திமுகவின் வர­லாற்­றில் மட்­டுமின்றி தமிழ்நாடு வர­லாற்­றி­லும், இந்­திய வர­லாற்­றி­லும் முக்­கி­ய­ மாநா­டாக அமை­ய உள்ளது. நாடாளுமன்ற தேர்­தல் வெற்றிக்கு சேலம் மாநாடு அடித்­த­ளம் அமைக்கும். கிட்­டத்­தட்ட 5 லட்­சம் திமுக தொண்டர்கள், இளை­ஞ­ர­ணி நிர்வாகிகள் வர உள்ளனர். அதற்­கான ஏற்­பா­டு­களை நாங்கள் செய்­து இருக்கிறோம். இது அவர்­க­ளுக்கு எழுச்­சி­யும் உணர்ச்­சி­யும் ஊட்­டும் மாநாடாக அமையப் போகிறது.” என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+