Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரையில் 3.18 ஏக்கர் நில பத்திரப்பதிவு.. ஆமா, தாய் பத்திரம்? அரசு ஊழியர்களால் ஆடிப்போன திருமங்கலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு அதிகாரிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை லஞ்சம் வாங்கி கைதாவது தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது... கைது நடவடிக்கைகள் அதிகமானாலும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இதோ மதுரையில் 2 பேர் சிக்கியிருக்கிறார்கள்.

தமிழகத்தின் அரசு துறைகளில் லஞ்ச லாவண்யங்கள் பெருகி கொண்டிருக்கின்றன.. லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் அப்பட்டமாக அசிங்கப்பட்டு, கைதாகி வருகிறார்கள். இதில், பெண் அதிகாரிகளும் கைதாவது கவலையை தந்து கொண்டிருக்கிறது.

Mother Document Land Registration Madurai

அந்தவகையில், சமீபகாலமாகவே வருவாய்த்துறையிலும், பதிவுத்துறையிலும், லஞ்சம் வாங்குவோர் சிக்கி, கைது நடவடிக்கைகளும் பெருகி வருகின்றன. பட்டா மாறுதல் கோரியும், நிலத்தை அளக்க வேண்டியும், விதவைத் தொகை வழங்க கோரியும், வருவாய் சான்றிதழ் உள்ளிட்டவைகளுக்காகவும் பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், தங்களையே நம்பி வரும் மக்களிடம், லஞ்ச பணம் கேட்பதால், அதிர்ச்சிக்குள்ளாகிவிடுகிறார்கள்.

சார் பதிவாளர்கள் - மூலப்பத்திரம்

இதனால், விண்ணப்பதாரர்கள் நேரடியாகவே லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு புகார் தந்துவிடுகிறார்கள். இந்த புகாரின்பேரில் கையும் களவுமாக அதிகாரிகளும், ஊழியர்களும் பொதுவெளியில் கைதானாலும், மீண்டும் லஞ்சம் பெறும் அதிகாரிகள் முளைத்து கொண்டேயிருக்கிறார்கள். இதோ மதுரையில் பத்திரப்பதிவு செய்ய போனவருக்கு நேர்ந்த நிலைமையை பாருங்கள்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் ஜவஹர் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார்.. இவர் ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியர் ஆவார்.. சமீபத்தில் இவர், கிழவநேரியில் 3.18 ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறார்.. ஆனந்தராஜூக்கு, இந்த 3.18 ஏக்கர் நிலத்தை செந்தில்குமார் என்பவருக்கு விற்றுள்ளார்..

Mother Document Land Registration Madurai

திருமங்கலம் பத்திரப்பதிவு

இந்த நிலத்தை பதிவு செய்ய திருமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகம் சார் பதிவாளர் (பொறுப்பு) பாண்டியராஜனை அணுகினார். ஆனால், நிலத்தின் மூலப்பத்திரம் காணாமல் போனதாக தேனி தென்கரை ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இதன் உண்மை தன்மை குறித்து விசாரணை செய்யாமல், நிலப்பதிவு செய்வதற்கு ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டாராம் பாண்டியராஜன்.. இந்த லஞ்ச பணத்தை வழங்க செந்தில்குமாருக்கு விருப்பமில்லை..

பதிவாளர், பத்திர எழுத்தர்

ஆனால், "ரூ.1 லட்சம் வழங்கினால் மட்டுமே பதிவு செய்யலாம்" என பதிவாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பேரம் பேசப்பட்டு, ரூ.70 ஆயிரமாக குறைத்த பதிவாளர், இந்த தொகையை பத்திர எழுத்தர் பாலமணிகண்டனின் வங்கி கணக்கில் செலுத்துமாறும் சொன்னாராம்.. அதன்படியே, செந்தில்குமார் வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்திவிட்டு, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடமும் புகார் அளித்தார்..

இதையடுத்து, பாலமணிகண்டனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்தனர். அவரது வாக்குமூலத்தின்படி பாண்டியராஜனிடமும் விசாரித்தனர். இறுதியில் சார் பதிவாளர், எழுத்தர் என இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+