வேலையை காட்டும் கொரோனா.. தமிழகத்தில் ஆக்ஸிஜன் உதவியுடன் ஐசியூவில் 3 பேர் அனுமதி.. பரபரக்கும் டேட்டா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து வரும் நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஆக்ஸிஜன் உதவியுடன் 3 பேர் சிகிச்சை வருகிறார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக 2 நாட்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாசிட்டிவிட்டி சதவீதமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

3 in Tamilnadu admitted in ICU for Corona with life support

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்கு 100 பேர் என்றால் அவர்களில் 6 பேருக்கு கொரோனா உறுதியாகிறது. அது போல் சென்னையில் 100 இல் 8 பேருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. சென்னையில் மார்ச் 1 ஆம் தேதி 0.4 சதவீதமாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 7.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கொரோனா: புதிதாக வரும் கொரோனா தொற்று இதற்கு முன்பு வந்த அலைகளை போல் இல்லாமல் வேகமாகப் பரவி வருகிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அறிகுறிகளை பொருத்தவரை சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படும் என தெரிவிக்கிறார்கள். இணை நோய் இருப்பவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

அறிகுறிகள் என்ன: தொடர்ந்து கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சுகாதாரத் துறை தெரிவிக்கிறது. அறிகுறிகள் தென்பட்டால், சோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கல் ஓட்டும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சி மீண்டும் தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்பு: கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆகத்தான் இருந்தது. கடந்த ஒரு மாத காலத்தில் படிப்படியாக எண்ணிக்கை உயர்ந்து தற்போது 180 பேருக்கு தினசரி தொற்று ஏற்படுகிறது. நேற்று முன் தின் புதிதாக தமிழகத்தில் 198 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. நேற்றைய தினம் 242 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

தமிழகத்தில் ஆக்ஸிஜன் தேவையா: இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் 1,216 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 82, செங்கல்பட்டில் 12, கோவையில் 12 என பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 3,595 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. நேற்றைய தினம் கொரோனாவால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை. கடந்த 4 ஆம் தேதி நிலவரப்படி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தேவைப்படும் அளவிற்கு இல்லை. ஆனால் தற்போது நிலை மாறிவிட்டது.

3 in Tamilnadu admitted in ICU for Corona with life support

ஐசியூவில் 3 பேர் சிகிச்சை: மாநில பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர். மேலும் ஆக்ஸிஜன் படுக்கையில் நாகையில் 6 பேரும் சென்னையில் 4 பேரும், சேலத்தில் 4 பேரும், தூத்துக்குடியில் 2 பேரும் உள்ளனர். எனவே கூட்டம் நெரிசலாான பகுதிகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+