டெண்டர் முறைகேட்டால் ரூ.397 கோடி அரசுக்கு இழப்பு? TANGEDCO மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு!
சென்னை: முறைகேடான டெண்டர் மூலம் டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் 397 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும், TANGEDCO மற்றும் முறைகேடாக ஒப்பந்தம் கோரிய ஒப்பந்ததாரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய போட்டி ஆணையத்தில் சென்னையைச் சேர்ந்த சிவராமன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, பல்வேறு திறனில் 45,800 மின்மாற்றிகள் 1182 கோடி ரூபாயில் கொள்முதல் செய்வதற்காக 10 டெண்டர்கள் கோரப்பட்டன. அதில், 7 டெண்டர்களில், 26,300 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில், 397 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குறிப்பாக, 500 கிலோ வாட் திறனுடைய 800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ய 2021 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரில், 26 ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர். அந்த ஒப்பந்ததாரர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக 13 லட்சத்து 72 ஆயிரத்து 930 ரூபாய் என ஒரு மின்மாற்றியின் டெண்டர் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து சமர்ப்பித்துள்ளனர்.
இவ்வாறு 26 ஒப்பந்ததாரர்களும் ஒரே மாதிரியான விலைப் பட்டியலை சமர்ப்பித்திருப்பது என்பது முறைகேடான டெண்டர் நடைமுறையாக உள்ளது. மேலும் கூட்டு சதி நடந்துள்ளதையும் வெளிக்காட்டுகிறது. இதனையடுத்து ஒரு மின்மாற்றி 12 லட்சத்து 49 ஆயிரத்து 800 ரூபாய் என விலை இறுதி செய்யப்பட்டு, அந்த 26 ஒப்பந்ததாரர்களில்16 பேரை இறுதி செய்து அவர்களுக்கு தலா 50 எண்ணத்தில் 800 மின்மாற்றிகள் 99 கோடியே 98 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், ஒரு மின்மாற்றியின் விலையே, 7 லட்சத்து, 89 ஆயிரத்து, 750 ரூபாய்தான். அதாவது, 800 மின்மாற்றிகளையும், 63.18 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்க முடியும். ஆனால் 4 லட்சத்து 60 ஆயிரத்து 50 ரூபாய் அதிக விலை கொடுத்து மின்மாற்றிகளை வாங்கி ஒரு டெண்டரில் அரசுக்கு சுமார் 36 கோடியே 80லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுத்தி உள்ளனர்.
அதேபோல 200 கிலோ வாட் மின்மாற்றி டெண்டரில் பங்கேற்ற 30 ஒப்பந்ததாரர்களும், ஒரே மாதிரியாக 7 லட்சத்து 7 ஆயிரத்து 823 ரூபாய் என ஒப்பந்த விலைபட்டியல் சமர்பித்துள்ளனர். மேலும் 100 கிலோவாட் மின்மாற்றி டெண்டரில் பங்கேற்ற 33 ஒப்பந்ததாரர்களும் ஒரே மாதிரியாக 4 லட்சத்து 79 ஆயிரத்து 80 ரூபாய் என ஒப்பந்த விலைபட்டியல் சமர்பித்துள்ளனர்.
இவ்வாறு 7 டெண்டர்களில், 26,300 மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில், சுமார் 397 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில், TANGEDCO மீதும், முறைகேடாக ஒப்பந்தம் கோரிய ஒப்பந்ததாரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையை சேர்ந்த சிவராமன் என்பவர் இந்திய போட்டி ஆணையத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முன்னதாக அறப்போர் இயக்கம் சார்பில் இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதில் ரூ.397 கோடிக்கு ஊழல் நடந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது, மின்மாற்றிகள் கொள்முதலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என தமிழக மின்சார வாரியம் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications