அமலாக்கத்துறை ஒன்றும் போலீஸ் அல்ல.. கபில் சிபல் வாதம் சரி! 3வது நீதிபதி தீர்ப்பில் முக்கிய பாயிண்ட்!
சென்னை: செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு வழக்கில், நீதிபதி பரத சக்கரவர்த்தி வழங்கிய தீர்ப்பை, 3வது நீதிபதி கார்த்திகேயன் உறுதி செய்தார். அதேசமயம், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முன்வைத்த வாதங்கள் சரியானது என்றும் ஏற்றுக்கொண்டுள்ளார் நீதிபதி சி.வி.கார்த்திகேயன்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில், மூன்றாவது நீதிபதி சிவி கார்த்திகேயன் அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இன்று அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், 3-வது நீதிபதி தீர்ப்பளித்தார்.

முதல் நாள் செந்தில் பாலாஜி தரப்பின் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். அப்போது, தங்களிடம் உள்ள ஆதாரங்களை அமலாக்கத்துறை பட்டியலிட்டு வாதாடிய துஷார் மேத்தா, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் கடமை எனத் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் அமலாக்கத்துறையினருக்கு காவல்துறை அதிகாரம் வழங்கப்படவில்லை என்றும், சம்மன் அனுப்புவதற்கும் சோதனை மற்றும் பறிமுதல் செய்வதற்கும் மட்டுமே அவர்களுக்கு உரிமை உள்ளது, புலன் விசாரணை செய்வதற்கு உரிமை இல்லை, அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒன்றும் போலீசார் அல்ல என்ற வாதங்களை முன்வைத்தார்.
இந்நிலையில், 3வது நீதிபதி சிவி கார்த்திகேயன், பரத சக்கரவர்த்தி அளித்த தீர்ப்புடன் உடன்படுவதாகத் தெரிவித்துள்ளார். காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது, கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது, செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர் தான். எனவே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனத் தீர்ப்பளித்துள்ளார்.
அதேசமயம், அமலாக்கத்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகளாக செயல்படுவதற்கு சட்டத்தில் எங்கும் வகைப்படுத்தப்படவில்லை. கைது செய்யப்பட்டவரை, அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை செய்ய உரிமை இல்லை என்ற கபில் சிபல் வாதம் சரியானது. நன்கு கற்றறிந்த மூத்த வழக்கறிஞரின் இந்த வாதத்தை யாராலும் மறுக்க முடியாது என்றும் 3வது நீதிபதி கார்த்திகேயன் தெளிவுபடுத்தியுள்ளார்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications