ஐஏஎஸ் அதிகாரிகள் 4 பேர் பணியிட மாற்றம்.. தமிழக அரசின் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா அதிரடி உத்தரவு!
சென்னை: தமிழ்நாட்டில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை நிர்வாக காரணங்களுக்காக தமிழக அரசு அவ்வப்போது பணியிட மாற்றம் செய்வது வழக்கம். அந்த வகையில் இன்று 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ரமண சரஸ்வதி, எம்.பிரதாப், ஸ்ரேயா பி. சிங், சித்ரா விஜயன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு துறை மாற்றமும், 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கி தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சித்ரா விஜயன் ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இணை தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாடு ஊரக புத்தாக்க தலைமை செயல் அதிகாரி மற்றும் தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட அதிகாரியாக பொறுப்பில் இருந்து வந்தார்.
ரமண சரஸ்வதி ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு ஃபைபர்நெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் முன்பு தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இணை தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர்.
எம்.பிரதாப் ஐ.ஏ.எஸ், சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் துணைச் செயலாளர் பொறுப்புடன் தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்ட அதிகாரி பொறுப்பையும் கூடுதலாக ஏற்று செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரேயா பி சிங் ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்புடன் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications