Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருவிடந்தை அருகே இளைஞர் கொலை.. துப்பு துலங்கியது.. குற்றவாளி போலீஸில் பகீர் வாக்குமூலம்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திருவிடந்தை அருகே இளைஞர் கொலை.. துப்பு துலங்கியது..

    மாமல்லபுரம்: மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை சாலையோரத்தில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டு வீசப்பட்ட விவகாரத்தில் போலீஸாருக்கு துப்பு துலங்கியது.

    திருவிடந்தை சாலையோரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத ஆண் சடலம் காணப்பட்டது. இதுகுறித்து அவ்வழியே சென்றவர்கள் மாமல்லபுரம் போலீஸில் புகார் அளித்தனர்.

    அந்த புகாரின் பேரில் போலீஸார் இளைஞர் குறித்த விவரங்களை விசாரித்து வந்தனர். இதில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த அருண்பிரகாஷ் (24) என்பது தெரியவந்தது. மேலும் அவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    தலைமறைவு

    தலைமறைவு

    தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீஸார் தேடி வந்தனர். இதில் இந்த வழக்கில் மோகன்ராஜ் (37), சிவசங்கரன் (27), மதியரசன் (24), முகிலன் (23) ஆகிய 4 பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் சரணடைந்தனர். மேலும் தலைமறைவாக இருந்த ஜெயராமனை (28) நேற்று மாமல்லபுரத்தில் சிக்கினார்.

    பரபரப்பு

    பரபரப்பு

    இந்நிலையில் அருண் பிரகாஷை கொலை செய்தது ஏன் என்பது குறித்து ஜெயராமன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அருண்பிரகாஷின் பெரியம்மாள் மகள்தான் இந்திரா (36). இவர் கணவரை பிரிந்து புதுவையில் உள்ள ரெட்டியார்பாளையத்தில் வசித்து வருகிறார். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜுடன் இந்திராவுக்கு தொடர்பு ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்திரா புகார்

    இந்திரா புகார்

    மோகன்ராஜுக்கு திருமணமாகி மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் தன் மகள்களுக்கு மோகன்ராஜ் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக ரெட்டியார்பாளையம் போலீஸார் இந்திரா புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் மோகன்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தில் இந்திராவுக்கு அருண்பிரகாஷ் பக்கபலமாக இருந்து உதவிகளை செய்ததால் அவர் மீது மோகன்ராஜுக்கு ஆத்திரம் தலைக்கேறியது.

    விசாரணை

    விசாரணை

    இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்ததும் அருண்பிரகாஷை கொலை செய்ய தனது நண்பர்களுடன் அவரை கோவளம் அருகே உள்ள சவுக்குத் தோப்புக்கு வரவழைத்தனர். அப்போது மதுஅருந்திவிட்டு போதை தலைக்கேறியதும் அருண்பிரகாஷின் தலையில் கல்லை போட்டு கொன்று விட்டனர். நீதிமன்றத்தில் சரணடைந்த 4 பேரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+