தமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா... 6 பேர் உயிரிழப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.சென்னையில் 146 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் 45-வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் பாதிப்பு பதிவாகி உள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,43,690 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 45-வது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் பாதிப்பு பதிவாகி உள்ளது. கொரோனாவுக்கு மேலும் 6 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில் 146 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையியல் 89வது நாளாக 500-க்கும் கீழ் பாதிப்பு பதிவாகி உள்ளது. தொற்றில் இருந்து மேலும் 490 பேர் குணமடைந்தனர். தமிழகத்தில் மேலும் 55,592 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 1,62,86,634 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது.
மேலும் 55,755 மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 1,65, 99,681 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.4,294 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.