சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை லலிதா ஜூவல்லரியில் 5 கிலோ நகை கொள்ளை- ராஜஸ்தான் ஊழியருக்கு போலீஸ் வலைவீச்சு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை தியாகராயர் நகர் லலிதா ஜூவல்லரி நகை கடையில் 5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இந்த நகைகளை கொள்ளையடித்த கடையின் ஊழியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள லலிதா ஜூவல்லரி அலுவலகத்தில் நகையை மதிப்பிடும் போது 5 கிலோ தங்க நகை காணவில்லை என மேலாளர் முருகன் என்பவர் போலீசில் புகார் அளித்தார்.

 5 kg gold stolen from Chennai Lalithaa Jewellery

இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகள் மூலம் அலுவலக நடமாட்டங்களை ஆராய்ந்தனர். அப்போது கடையில் 8 ஆண்டுகளாக வேலைபார்த்து வந்த ராஜஸ்தானை சேர்ந்த ஊழியர் ஒருவர் தனியாக இருந்த பெட்டியோடு கையிலியில் மறைத்து தனது பையில் எடுத்து செல்லும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது.

அதனை கைப்பற்றி அதனை கொண்டு தேனாம்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய அரசு நிபந்தனையின்றி விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்- மு.க. ஸ்டாலின் மத்திய அரசு நிபந்தனையின்றி விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்- மு.க. ஸ்டாலின்

2 ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கடையில் ரூ13 கோடி நகைகள் கொள்ளையடிக்க சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
5 kg gold stolen from Chennai Lalithaa Jewellery.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X