பெங்களூருவில் இருந்து 50 கிலோ குட்கா கடத்தல்... சென்னையைச் சேர்ந்த இருவர் கைது
சென்னை: சென்னையில் 50 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு விரைவு மெயில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 50 கிலோ குட்கா பொருட்களை சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்குத் தடைவிதித்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அந்தத் தடை இன்னமும் அமலில் இருக்கும் நிலையில், மாநிலத்தில் குட்கா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதே நேரம், குட்கா தொடர்பான வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.

இருவர் கைது
அரக்கோணத்தை சேர்ந்த சசிக்குமார் (38), ஆவடி கண்ணிகாபுரம் பகுதியை சேர்ந்த நெமிசந்த் ஜெயின் (41) ஆகிய இருவரும் சேர்ந்து பெங்களூரில் இருந்து ரெயில் மூலம் குட்கா பொருட்களை மூட்டை, மூட்டைகளாக கொண்டு வந்துள்ளனர்.

தனிப்படை விசாரணை
சென்னையில் பெரம்பூர், மாதவரம், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் பெட்டிகடைகளில் விற்பனைக்காக இருவரும் தொடர்ச்சியாக விநியோகம் செய்து வந்துள்ளனர். இதனையடுத்து, செம்பியம் காவல் ஆய்வாளர் ஜெகன்நாதன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதிகாலை சோதனை
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் ரயில் மூலமாக தான் குட்கா பொருட்கள் கொண்டுவரப்பட்டு சென்னை பகுதிக்கு விநியோகம் செய்யப்படுவது தெரியவந்தது. இந்நிலையில் இன்று அதிகாலையில் ரயிலில் நடத்திய சோதனையில் 50 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.

சிறையில் அடைப்பு
இது குறித்து செம்பியம் காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களில் 12 வகையான பொருட்கள், 187 பாக்கெட்டுகள் என மொத்தமாக 50 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு
முன்னதாக, அறப்போர் இயக்கத்தினர் வீடியோவுடன் குற்றச்சாட்டு ஒன்றை பதிவு செய்திருந்தனர். அதில், வி.ஐ.பி. கேட் வழியாக குட்கா பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. எடை போடுதல், பரிசோதனை என எதுவுமின்றி மிகச் சுதந்திரமாக அவற்றைக் கடத்தல்காரர்கள் எடுத்துச் செல்கிறார்கள். ரயில்வேத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் முழு ஒத்துழைப்போடு தான் இந்தக் கடத்தல் நடந்து வருகிறது எனத் தெரிவித்திருந்தனர்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications