Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வைகை, மலைக்கோட்டை உள்பட பல ரயில்கள் நிற்க போகும் புதிய இடங்கள்.. தமிழ்நாட்டிற்கே இனிப்பான விஷயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ஓடும் மதுரை வைகை எக்ஸ்பிரஸ், திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ், பெங்களூர் யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ், ஆந்திராவின் புட்டபர்த்தி செல்லும் ரயில், புதுச்சேரி ஹவுரா எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்பட ஏராளமான ரயில்களில் அறிவிக்கப்பட்ட புதிய நிறுத்தங்களில் தொடர்ந்து மறு அறிவிப்பு வரும் வரை நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே நேற்று மேஜர் அறிவிப்பு ஒன்றை அறிவித்திருக்கிறது. அது என்னவென்றால் சோதனை அடிப்படையில் தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட புதிய நிலைய நிறுத்தங்களில் அடுத்த அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து ரயில்கள் நின்று செல்லும் என்று கூறியுள்ளது.

53 trains to halt at many new stations like Vaigai, Malaikottai: Southern Railway Good news

அதன்படி, தமிழகத்தில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் வைகை, மலைக்கோட்டை , குருவாயூர் உள்ளிட்ட 53 விரைவு ரயில்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் கூடுதல் ரயில் நிறுத்தங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. தற்போது இதுபற்றி புதிய அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதாவது தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் 53 விரைவு ரயில்கள் கடந்த செப்டம்பர் முதல் 6 மாதங்களுக்கு கூடுதல் ரயில் நிலையங்களில் சோதனை அடிப்படையில் நின்று செல்ல ரயில்வே வாரியம் ஒப்புகள் அளித்துள்ளது.

தினமும் மதுரை சென்னை இடையே செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மறு அறிவிப்பு வரும் வரை இரு மார்க்கத்திலும் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும். இதேபோல் திருச்சிக்கு தினமும் செல்லும் ராக்ஃபோர்ட் கல்லக்குடி பழங்காநத்தத்திலும், மன்னை விரைவு ரயில் கொரடாச்சேரியிலும், உழவன் விரைவு ரயில் கடலூர் துறைமுகத்திலும், நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் சாத்தூரிலும் மறு அறிவிப்பு வரும் வரை நின்று செல்லும்.

இதேபோல் சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மறு உத்தரவு வரை ஆரல்வாய்மொழியில் நின்று செல்லும்.
தொடர்ந்து நின்று செல்லும். சென்னையில் இருந்து சென்னை செல்லும் பெங்களூர் யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் வாலாஜா ரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்லும். ஹவுரா புதுச்சேரி வீக்லி எக்ஸ்பிரஸ் ரயில் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் மறு அறிவிப்பு வரும் வரை நின்று செல்லும். சாம்ராஜ் நகர் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் ஆம்பூரில் மறு அறிவிப்பு வரும் வரை நின்று செல்லும்.

மயிலாடுதுறை மைசூர் எக்ஸ்பிரஸ் புகலூரிலும். மும்பை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் கொடைரோடு ரயில் நிலையத்திலும், புனலூர் மதுரை இடையே செல்லும் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்திலும், மதுரை புனலூர் இடையே செல்லும் ரயில் சாத்தூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும். மும்பை நாகர்கோவில் ரயில் நாங்குநேரியிலும் நின்று செல்லும்.. திருப்பதி மன்னார்குடி எக்ஸ்பிரஸ் போளூர் திருகோவிலூரில் நின்று செல்லும். புருல்லா விழுப்புரம் எக்ஸ்பிரஸ் திருக்கோவிலூர் ரயில் நிலையத்திலும், ராமேஸ்வரம் அயோத்தியா சேது ரயில் காரைக்குடி மற்றும் ராமநாதபுரம் ரயில் நிலையத்திலும் மறு அறிவிப்பு வரும் வரை நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+