தமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா... மேலும் 5 பேர் உயிரிழப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.சென்னையில் 225 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூரில் 51 பாதிப்புகள் பதிவாகின. கொரோனாவுக்கு மேலும் 5 பேர் உயிரிழந்தனர்
தமிழகத்தில் இன்று 543 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,53,992 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவுக்கு மேலும் 5 பேர் உயிரிழந்தனர்.இதனால் மொத்த உயிரிழப்பு 12,513 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 225 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் மேலும் 54,676 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 1,74,19,485 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 54,863 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தம் 1,77,36,224 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூரில் 51 பாதிப்புகள் பதிவாகின. செங்கல்பட்டில் 46 பாதிப்புகளும், திருவள்ளூரில் 33, காஞ்சிபுரத்தில் 20 பாதிப்புகளும் பதிவாகின.












Click it and Unblock the Notifications