சென்னையில் 552 பேருக்கு கொரோனா - பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்த 87 பேருக்கும் பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் சென்னையில்தான் இன்று அதிகபட்சமாக 552 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மேலும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்த 87 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் இன்று மாவட்ட ரீதியாக கொரோனா பாதிப்பு விவரம்:
செங்கல்பட்டு- 22 ; சென்னை- 552; திண்டுக்கல் -1 ; கள்ளக்குறிச்சி-1;
காஞ்சிபுரம்- 5; கன்னியாகுமரி- 2; நாகை-1; ராமநாதபுரம்- 2
ராணிப்பேட்டை- 1; தஞ்சாவூர்- 3; தேனி- 1; திருவள்ளூர் 8;
தூத்துக்குடி- 1; திருச்சி- 1 ; விமான நிலையம் தனிமை முகாம் 36
இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7672 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்றும் 688 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,448 ஆக உயர்வு
கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், தென்காசி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் மகாராஷ்டிராவில் இருந்து திரும்பிய 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.