6000 ரூபாய் இருக்கு.. "இவங்களுக்கு" கூடுதல் நிவாரணம் உண்டு.. தமிழக அரசு நம்பிக்கை.. துள்ளும் சென்னை
சென்னை: சென்னை எண்ணூரில் எண்ணெய் பாதித்த வீடுகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு உறுதி தந்துள்ளது..!!
மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண நிதியை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புயல்: சென்னையை உலுக்கிஎடுத்து சென்ற மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை மட்டுமல்லாமல் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் தங்களது உடமைகளை இழந்து தவித்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே, கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.. ஆனால், இந்த தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிட வேண்டும் என்று, சென்னையை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல மனுதாக்கல் செய்துள்ளார்.
நிவாரண தொகை: அந்த மனுவில், "தமிழக அரசு நிவாரண தொகை வழங்குவது பாராட்டக்குரியது.. அந்த தொகையை ரேஷன் கடைகள் மூலம் அல்லாமல் நேரடியாக கொடுக்க வேண்டும்.. ரேஷன் கடைகள் மூலம் ரொக்கமாக கொடுப்பதால் அதிகளவில் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது.. நியாயமாக பாதிக்கபட்டவர்களுக்கு நிவாரண நிதி சென்றடையாமல் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது..
எனவே, பல்வேறு திட்டங்களுக்கான தொகையை அரசு, நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தி வரும் நிலையில், இந்த நிவாரண பணத்தையும் வங்கி கணக்கில் செலுத்துவதில் அரசிற்கு எந்தவித சிரமும் இருக்காது என்பதால், புயல் வெள்ள நிவாரண நிதியை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணூர்: இந்நிலையில், எண்ணூரில் எண்ணெய் பாதித்த வீடுகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு உறுதி தந்துள்ளது.. சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன், நுங்கம்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது சொன்னதாவது:
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 4 மட்டும் இன்று செயல்படவில்லை. தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நாளை பள்ளியை திறக்க மாற்று ஏற்பாடு செய்யப்படும்.. குடிநீர், கழிவறை, கொசுக்கள் பாதிப்பு இல்லாமல் இருக்க பொது சுகாதாரத்துறை மூலம் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் கடைசி தண்ணீர் வடியும் வரை பணிகள் மேற்கொள்ளப்படும்.
வெள்ள நீர்: வெள்ளம் வடிந்த பகுதிகளில் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், சேற்றுப்புண், சுவாச பிரச்சனை போன்றவை ஏற்படும். எலி காய்ச்சல் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதனால், அதற்கான மருந்து, மாத்திரை சாப்பிட வேண்டும். எண்ணூரில் எண்ணெய் பாதித்த வார்டு 1, 2 பகுதிகளுக்கு சுற்றுச்சூழல் அதிகாரிகள் மற்றும் தலைமை செயலாளர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து சிபிசிஎல் நிறுவனத்துடன் ஆலோசனையும் நடத்தினார்கள்.. இதில் தனிக்குழு ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், எண்ணெய் பாதிப்பை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன..
அவர்களுக்கு கூடுதலாக நிவாரண நிதி வழங்கப்படும். நிவாரணப் பணிகள் முடிந்தாலும் மறுவாழ்வு பணி, மீட்பு பணி போன்றவை தொடர்ந்து நடைபெறும்" என்றார் ராதாகிருஷ்ணன்.
எடப்பாடி: முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, "சென்னை மணலி, மணலிப்புதூர், எர்ணாவூர் போன்ற பகுதிகளில் மழை நீருடன் அப்பகுதியில் இயங்கிவரும் ஆலைகளின் ஆயில் கழிவுகளால் சுமார் ஐந்தாயிரம் குடியிருப்புகளில் மக்கள் வாழ முடியாத அவலம் ஏற்பட்டுள்ளதால், 25,000 ரூபாய் நிவாரணம் வழங்குவதுடன், எண்ணெய் கழிவுகளை தகுந்த தொழில்நுட்ப உதவியுடன் தூய்மைப் படுத்தும் பணியினையும் செய்துதர வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மீனவர்கள் கோரிக்கை: இதனிடையே, இங்குள்ள எண்ணெய் நிறுவனங்களை மூட வேண்டும் என்ற கோரிகைகளை, எண்ணூர் மீனவர்கள் எழுப்ப துவங்கி உள்ளனர்.. "எங்களுக்காக மட்டும் இதை சொல்லவில்லை.. கடலில் வாழும் கடல்சார் உயிரினங்களின் நலனுக்கும் சேர்த்தே இந்த கோரிக்கையை வைக்கிறோம்.. இந்த எண்ணெய் கழிவினால், உடலில் அரிப்பு, சுவாச பிரச்சனைகள் ஏற்படுவதால், இதற்கு ஒரு முற்றுப்புள்ளியை தமிழக அரசு வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications