Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. மாநில தேர்தல் ஆணைய செயலாளராக வெங்கட பிரியா நியமனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை (IAS officers) இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக வெங்கட் பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாராக எஸ் பிரியங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக அவ்வப்போது ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று தமிழ்நாட்டில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் என் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

IAS officers Government of Tamil Nadu Chief Secretary

7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

* அதன்படி, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக வெங்கட் பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெங்கட பிரியா உள்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அரசு கூடுதல் செயலாளராக இருந்து வந்தார்.
* தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாராக எஸ் பிரியங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* துாத்துக்குடி மாநகராட்சி கமிஷனராக பிரியங்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சஜ்ஜன்சிங் ரா சவான்

* பொது மற்றும் மறுவாழ்வுத்துறை அரசு சிறப்பு செயலாளராக இருந்த சஜ்ஜன்சிங் ரா சவான் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை துணைச்செயலாளராக பானோத் ம்ருகேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னதாக தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனராக இருந்து வந்தார்.

* சமூக நலத்துறை இயக்குனரகத்தின் கூடுதல் இயக்குனராக சரண்யா அரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன செயல் அலுவலராக ஸ்வேதா சுமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

முன்னதாக கடந்த வாரம் தான் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து அறிவிப்பு வெளியாகி இருந்தது. திருச்சி டிஐஜி வருண்குமார் உள்பட சில முக்கிய அதிகாரிகளை தமிழக அரசு இடமாற்றம் செய்திருந்தது.

* திருச்சி டிஐஜி வருண்குமார் சென்னை சிபிசிஐடி டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
* தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக டிஜிபியாக இருந்த பிரமோத் குமார் ஊர்க்காவல் படை டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
* குற்ற ஆவணக் காப்பக ஏடிஜிபி ஆயுஷ் மணி திவாரி மின் உற்பத்தி கழக ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
* ஊர்க்காவல் படை ஐ.ஜியாக இருந்த ஜெயஸ்ரீ குற்ற ஆவணக் காப்பக ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

தமிழக புதிய டிஜிபி யார்?

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழக புதிய டிஜிபி குறித்து அறிவிப்பு நாளை வழியாக கூடும் என்று சொல்லப்படுகிறது. தற்போது டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் வரும் 31 ஆம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் புதிய டிஜிபியாக வெங்கட்ராமன் ஐபிஎஸ் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் வெங்கட்ராமன். யுபிஎஸ்சி தேர்வில் தமிழக கேடரில் 1994 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+