நாட்டின் 71ஆவது குடியரசு தினம்... மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் தீவிரம்
சென்னை: நாடு முழுவதும் நாளை குடியரசு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Recommended Video

நாட்டின் 71ஆவது குடியரசு தினம் நாளை கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்பார்.

தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள காந்தி சிலை முன் குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றவுள்ளார். இதையடுத்து, சென்னையில் மூன்றடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சுமார் 15 ஆயிரம் காவலர்கள் சென்னையில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் காவலர்கள் தற்போது பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன், மாநிலத்திலுள்ள முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகையிலும் ஈடுபட்டனர். இந்த ஒத்திகையில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் நடைமேடைகளில், தீவிர சோதனை மேற்கொண்டனர்.
மேலும், மக்கள் அதிகம் ஒன்றுகூடும் இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல மாநிலம் முழுதும் உள்ள ரயில் நிலையங்களிலும் அசம்பாவிதங்கள் நடக்காமல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பயணிகளின் உடைமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சோதனைக்கு பின்ரே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். விருதுநகர் ரயில்வே நிலையத்தில் பாதுகாப்புப் பணிக்காக 50க்கும் மேற்பட்ட காவலர்கள் ஈடுபட்டு உள்ளார்கள்
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications