திடீரென்று.. நடுராத்திரி அலறிய பாட்டி.. காமுகனின் வெறித்தனம்.. கடைசியில் பார்த்தால்..!
72 வயசு பாட்டியை ஒருவர் பலாத்காரம் செய்துவிட்டார்
சென்னை: சிங்கிள் டீ வாங்கி தரேன்னு சொல்லி வயசான பாட்டியை பலாத்காரமே செய்துவிட்டார் ஒரு இளைஞர்.. அவரைதான் போலீசார் இப்போது தேடி கொண்டிருக்கிறார்கள்.
திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி.. இவர்தான்அந்த பாட்டி.. 72 வயசாகிறது.. நேற்று முன்தினம் நடுராத்திரி திருவொற்றியூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் திடீரென அலறினார்..

அந்த சத்தம் கேட்டு, அங்கிருந்தோர் ஓடிச் சென்று பார்த்தனர்.. அப்போது பாட்டிக்கு தலையில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. வலி பொறுக்க முடியாமல் கத்தவும், ஆஸ்பத்திரி ஊழியர்கள் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை தந்தனர்.. அப்போதுதான் அவரது உடலில் பல இடங்களில் ரத்த காயங்கள் இருந்தது.. பாட்டியின் உடல்நிலையும் ஆபத்தாக இருந்தது..
எனவே ஆஸ்பத்திரி தரப்பு போலீசாருக்கு தகவல் தரவும், அவர்கள் விரைந்து வந்து பாட்டியை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்... பின்னர், ஆஸ்பத்திரி வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்... அப்போது, இளைஞர் ஒருவருடன் பாட்டி ஆஸ்பத்திரிக்குள் நுழைவது பதிவாகி இருந்தது... பிறகு ஒரு மணி நேரம் கழித்து, பாட்டி மட்டும் தனியாக வெளியே செல்வதும் பதிவாகியிருந்தது...
இதையடுத்து நடந்த விசாரணையில், பாட்டிக்கு நைட் நேரம் தூக்கம் வரவில்லை.. அதனால் ஒரு டீ குடிப்பதற்காகவே வெளியே வந்திருக்கிறார்.. அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒரு இளைஞர் பாட்டியை பார்த்துவிட்டார்.. 72 வயசெல்லாம் அவர் கண்ணுக்கு தெரியவே இல்லை..
உடனே நைசாக பேசி, ஆஸ்பத்திரிக்குள் அழைத்து வந்து, கடைசியில் பலாத்காரமே செய்துவிட்டார்.. இதை எதிர்பார்க்காத பாட்டி, கத்தி கூச்சலிடவும், அத்ந இளைஞர் பயந்துபோய், கீழே கிடந்த கல்லை எடுத்து, பாட்டி தலையில் கல்லை போட்டுவிட்டு, தப்பிஉள்ளது தெரியவந்துள்ளது.. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய இளைஞரை தேடி வருகின்றனர். பாட்டி இப்போது சீரியஸாக இருக்கிறாராம்.












Click it and Unblock the Notifications