தமிழகத்தில் மேலும் 786 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 14,753 ஆக அதிகரிப்பு
சென்னை: தமிழகத்தில் மேலும் 786 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகள், பிற மாநிலங்களில் இருந்து வந்த 92 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் இன்று நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவில் மொத்தம் 694 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த 92 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.

சென்னையில் மட்டும் 569 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,753 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் இன்று தமிழகத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்திருக்கிறது.
கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டோரில் 846 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 7,128 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிலவரம்
மாவட்டங்களில் கொரோனா நிலவரம்: செங்கல்பட்டு- 40; ஈரோடு- 1; கள்ளக்குறிச்சி- 1 ; காஞ்சிபுரம் -13; கிருஷ்ணகிரி- 1; மதுரை- 1; புதுக்கோட்டை- 2; ராமநாதபுரம் -7 ; ராணிப்பேட்டை- 1 ; தேனி- 4; திருவள்ளூர்- 39; திருவண்ணாமலை-2; தூத்துக்குடி-6; திருநெல்வேலி- 1; திருச்சி -4; வேலூர்-2;












Click it and Unblock the Notifications