ரேபிட் டெஸ்ட் கிட் விவகாரம்... கேள்விகணைகள் வீசும் எதிர்க்கட்சிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்
சென்னை: தமிழக அரசு சீன நிறுவனத்திடம் கொள்முதல் செய்த ரேபிட் டெஸ்ட் கிட் விவகாரம் இப்போது பூதாகரமாகி சுகாதாரத்துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதை கோட்டையில் உள்ள ஒரு சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ரசித்து வருகிறார்கள்.
குறிப்பாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தலைமைச்செயலாளர் சண்முகம் ஆகியோருடன் கருத்து முரண்பாடுடைய பல அதிகாரிகள் இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து என்ன நடக்கக்கூடும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
ஆனால் இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காத, நிர்வாகத் திறமைக்கு பெயர் பெற்ற உமாநாத் ஐ.ஏ.எஸ் இதில் சிக்கிக்கொண்டு எதிர்க்கட்சி தலைவர்களின் கண்டனத்திற்கு ஆளாகியிருப்பது தான் பரிதாபத்திற்குரியது.

சத்தீஸ்கர் அமைச்சர்
கொரோனா பரிசோதனையை அதிவிரைவாக மேற்கொள்வதற்கு ஏதுவாக சீன நிறுவனத்திடம் ரேபிட் டெஸ்ட் கிட்களை கொள்முதல் செய்ய கடந்த ஜனவரி மாதமே ஆர்டர் கொடுத்தது தமிழக அரசு. இந்த விவகாரத்தை தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் உமாநாத் ஐ.ஏ.எஸ். தலைமையிலான அதிகாரிகள் குழு கவனித்துக்கொண்டது. இதனிடையே கடந்த 10 நாட்களுக்கு முன்னர், ரூ.337-க்கு தென்கொரியா நிறுவனத்திடம் ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதல் செய்ததாக சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

விலை எவ்வளவு?
சத்தீஸ்கர் அமைச்சரின் இந்த அறிவிப்பு தமிழக சுகாதாரத்துறைக்கு பெரும் தலைவலியாக மாறியது. தமிழகம் எவ்வளவு ரூபாய் கொடுத்து ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கியது என செய்தியாளர்கள் கிடுக்கிப்பிடி போட்டனர். இதனால் விலையை கூற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது தமிழக அரசு. ரூ.600-க்கு கொள்முதல் என்றவுடன் ஏன் இவ்வளவு விலை என தமிழக அரசை நோக்கி கேள்விக்கணைகள் பறந்தன. ஆனால் மத்திய அரசு நிர்ணயித்த விலையில் தான் தமிழக அரசு வாங்கியிருப்பதாகவும், எங்கும் தவறுகள் நடக்கவில்லை எனவும் உமாநாத் ஐ.ஏ.எஸை வைத்தே பதில் கூற வைத்தார் விஜயபாஸ்கர்.

அரசுக்கு நெருக்கடி
சரி விலை அதிகமாயினும் மக்களுக்கு பயன்படுகிறதே என்ற நோக்கில் எதிர்க்கட்சிகள் அப்போது அவ்வளவாக இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் முடிவுகளை தவறாக காட்டி ரேபிட் டெஸ்ட் கிட் பல்லிழித்த பின்பு தான் இந்த விவகாரம் குறித்த தகவல்களை முழுமையாக திரட்டத்தொடங்கி அரசுக்கு குடைச்சலை கொடுக்கத் தொடங்கியது திமுக. இதனால் முதல்வர் கடுமையாக அப்செட் ஆகிவிட்டாராம். கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் நற்பெயர் எடுத்து வரும் சூழலில் இது என்ன புதுக்கூத்து என சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ பணிகள் துறை அதிகாரிகளிடம் கொந்தளித்து இருக்கிறார் முதல்வர்.

அதிகாரிகள் ரசிப்பு
தலைமைச் செயலகத்தை பொறுத்தவரை திமுக ஆதரவு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அதிமுக ஆதரவு ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் என இரண்டு தரப்பினர் இருப்பதை அங்குள்ள அலுவலக உதவியாளர்களே கேட்டாலே அறிந்துகொள்ளமுடியும். இந்தசூழலில் பீலா ராஜேஷ் செயலாளராக இருக்கும் சுகாதாரத்துறைக்கு ரேபிட் டெஸ்ட் கிட் வடிவில் புது சிக்கல் சூழ்ந்திருப்பதை கோட்டையில் உள்ள பல அதிகாரிகளும் தங்களுக்குள் அகமகிழ்ந்து கொள்கிறார்களாம்.
இதனிடையே சீனாவில் வாங்கிய கருவிகள் திருப்பி அனுப்பப்படும், ஆர்டர் ரத்து செய்யப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications