கிபி 13-ல் அழிந்த சோழ பேரரசுக்கு கிபி 14-ல் உருவான திருவாவடுதுறை ஆதினம் குருவா? வானதியால் சர்ச்சை!
சென்னை: சோழப் பேரரசர்களுக்கு திருவாவடுதுறை ஆதினம் குருவாக விளங்கினார் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்திருக்கும் கருத்து சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பி உள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் தமிழ்நாட்டில் 21 ஆதினங்கள் சிறப்பிக்கப்பட்டனர். இது தொடர்பாக வானதி சீனிவாசன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: நமக்கு நாமே கட்டிமுடித்து பாரத பிரதமர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட புதிய பாராளுமன்றத்தில், சோழ பேரரசர்களுக்கு குருவாக விளங்கிய திருவாவடுதுறை ஆதீனத்தால், தமிழோசை ஒழிக்க, தேவார பாடல்கள் பாட செங்கோல் நிறுவப்பட்டது, நம் தாய் மொழி தமிழுக்கும், தமிழகத்திற்கும் கிடைத்த பெருமையும் அங்கீகாரமுமாகும்! பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலித்த தமிழ் உலகெங்கிலும் எதிரொலிக்கிறது, அது நம் தமிழ் மொழியின், தொன்மையை, பெருமையை உலகுக்கே எடுத்துரைக்கிறது! இவ்வாறு வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ளார்.

இதில் சோழ பேரரசர்களுக்கு குருவான விளங்கிய திருவாவடுதுறை ஆதீனம் என வானதி சீனிவாசன் எழுதியிருப்பதுதான் நெட்டிசன்களால் சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள நெட்டிசன்கள், தமிழ்நாட்டில் சோழர்கள் காலம் என்பது கிபி 13-ம் நூற்றாண்டுடன் முடிவுக்கு வந்துவிட்டது. கி.பி.1246-ம் ஆண்டு முதல் கிபி 1279 வரையிலான 3-ம் ராஜேந்திர சோழன், பிற்கால சோழர்களின் இறுதிப் பேரரசர். பாண்டியர்களின் உக்கிர தாக்குதலில் சோழப் பேரரசு நிர்மூலமாகி சிற்றரசு நிலைக்கு தள்ளப்பட்டு காலத்தால் அழிந்து போனது.

ஆனால் தமிழ்நாட்டில் சைவ சமயம் வளர்க்க உருவாக்கப்பட்ட ஆதீனங்கள், ஆதினங்கள், மடங்களின் வரலாறு என்பது கி.பி.14-ம் நூற்றாண்டில் இருந்துதான் தொடங்குகிறது. வானதி சீனிவாசன் சொல்லுகிற திருவாவடுதுறை ஆதீனம், தமிழ்நாட்டின் முதலாவது ஆதீனமாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் திருவாவடுதுறை ஆதீனம் கி.பி.14-ம் நூற்றாண்டில் அதாவது சோழப் பேரரசு அழிவுக்குப் பின்னரே உருவானது. வரலாறு இப்படி இருக்கும் போது சோழப் பேரரசர்களுக்கு திருவாவடுதுறை ஆதினம் குருவாக இருந்தது எப்படி வானதி சீனிவாசன் பதிவிட்டாரோ என கேள்வி எழுப்புகின்றனர் நெட்டிசன்கள்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications