காவி திருவள்ளுவர்-சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி-ஆளுநர் ஆர்.என்.ரவி ட்வீட்டால் புதிய சர்ச்சை!
சென்னை: திருவள்ளுவர் தினத்தில் காவி உடையுடன் திருவள்ளுவர் படத்தை பகிர்ந்ததுடன் "சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி" எனவும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.
தமிழர் திருநாளான பொங்கல் விழா நேற்று உலகத் தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவின் 2-ம் நாளான இன்று மாட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் விழாவின் 3-ம் நாளாக நாளை காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. இன்று திருவள்ளுவர் திருநாளும் கடைபிடிக்கப்படுகிறது. திருவள்ளுவர் சிலைக்கு தமிழ்நாடு அமைச்சர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் கருத்தும் படமும் தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. திருவள்ளுவர் படத்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவினர் காவி மயமாக்கினர். அதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இருந்த போதும் பாஜகவினர் தொடர்ந்து காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தையே பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் அதேபோல காவி உடை திருவள்ளுவர் படத்தை தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் திருவள்ளுவரை சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி எனவும் குறிப்பிட்டிருக்கிறார். இதுதான் இப்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் திருவள்ளுவர் தின வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தமது திருவள்ளுவர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இதற்கு அவரது எக்ஸ் பக்கத்திலேயே கடும் எதிர்ப்புகள் பதிவிடப்பட்டும் வருகின்றன.
ஏற்கனவே வள்ளலாரை சனாதன தர்மத்துடன் இணைத்து பேசி பெரும் சர்ச்சையில் ஆளுநர் ரவி சிக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications