Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை போலீஸ் செய்த பெரிய மாற்றம்.. எண்ணூர் மணலி விரைவு சாலையில் புதிய சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை எண்ணூர் மணலி விரைவுச்சாலை என்பது துறைமுகத்திற்கு செல்லும் சாலையாகும்... இங்கு கனரக வாகனங்கள் அதிகமாக செல்லும் நிலையில், போக்குவரத்து மிக அதிகமாக உள்ளது.. இந்த சாலையில் போலீசார் நட்டு வைத்த பெரிய தூண் சைஸ் கற்கள் காரணமாக விபத்துக்ள் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

சென்னை எண்ணூர் விரைவுச்சாலை துறைமுகத்தை இணைக்கும் முக்கியச் சாலையாக உள்ளது. இதன் காரணமாக பெரிய லாரிகள், ட்ரக்குகள் இந்த சாலையை அதிகம் பயன்படுத்துகின்றன. இதுதவிர எண்ணூர், மணலி பகுதி மக்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக எஸ்.பி.ஐ காலனி, பட்டினத்தார் கோயில், காமதேனு நகர், மஸ்தான் கோயில் என பல குடியிருப்பு பகுதி மக்கள் எண்ணூர் மணலி விரைவுச் சாலையை தினமும் வேலைக்கு சென்று வர பயன்படுத்தகிறார்கள்.

A new problem with the stone placed by the police on the Ennore Manali expressway in Chennai

இந்நிலையில் சென்னை துறைமுகத்தில் இருந்து, மணலி நோக்கி வந்த கன்டெய்னர் லாரிகளால் அடிக்கடி விபத்து ஏற்படுவதும் நடக்கிறது.குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பது அதிகமாக உள்ளது. திருவொற்றியூா், மணலி, தண்டையாா்பேட்டை பகுதிகளில் சி.பி.சி,எல்., ஐ.ஓ.சி., எஸ்.ஆா்.எஃப்., எம்.ஆா்.எஃப்., கான்காா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கனரகத் தொழிற்சாலைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட குறு, சிறு தொழிற்சாலைகளும் அமைந்திருக்கின்றன. இங்கு வேலை செய்யும் பலர் இந்த சாலையைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

இந்நிலையில் எண்ணூர் மணலி விரைவுச்சாலையில் கனரக வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள காரணத்தால், பிரதான சாலையின் நடுவே ஐந்து மீட்டருக்கு ஒரு சிமெண்ட் கல்லை அமைத்திருக்கிறது மாதவரம் போலீஸ்.. குறிப்பிட்ட வழியில் மட்டுமே கண்டெய்னர்கள் செல்ல வேண்டும என்பதற்காகவே இந்த ஏற்பாட்டினை போலீசார் செய்துள்ளனர். மேலும் லாரிகள் கற்களுக்கு இடையில் புகுந்து விதிமீறலில் ஈடுபடாமல் இருக்க கற்கள் இடையே கயிறும் கட்டி வைத்துள்ளார்கள்.

ஆனால் இந்த மாற்றத்தினை ஏற்று கனரக வாகனங்கள் விதியை சரிவர கடைபிடிக்கவில்லை.. இதன் காரணமாக விதிமீறல் அதிகரித்ததுடன், கனகர வாகனங்களிலும், கற்களிலும் மோதி இருசக்கர வாகன ஓட்டிகள் அதிக அளவில் விபத்தில் சிக்குகிறார்கள். கடந்த ஒரு மாதத்தில் ஐந்து இருசக்க வாகன ஓட்டிகள் இறந்து போனதாக புகார் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+