தாடி வைத்திருக்கும் ஆண்களை ஒப்பிடும் போது, நாய்களே தூய்மையானவை.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
தாடி வைத்திருக்கும் ஆண்களை ஒப்பிடும் போது, நாய்களே தூய்மையானவை என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
சென்னை: தாடி வைத்திருக்கும் ஆண்களிடம், நாய்களைவிட அதிக கிருமிகள் இருக்கும் என்ற அதிர்ச்சித் தகவல் ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
வச்சா குடிமி எடுத்தா மொட்டை என ஆண்களுக்கு இருப்பதே ஒரு சில ஹேர்ஸ்டைல் தான். அதில் ஒன்று தான் தாடி. ஆனால் தற்போது அதற்கும் வேட்டு வைத்து விட்டது ஆய்வு ஒன்று.

அதாவது, நாய்களின் முடியில் இருக்கும் கிருமிகளைவிட, ஆண்களின் தாடி முடியில் இருக்கும் கிருமிகள் அதிகம் என்கிறது இந்த ஆய்வு.
டெய்லி மெயில் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ள செய்தியின் அடிப்படையில், ஒரு ஆராய்ச்சியாளர்கள் குழுவை சேர்ந்தவர்கள், 18 ஆண்களின் தாடி முடி மற்றும் 30 நாய்களில் கழுத்து முடியை சாம்பிளாக எடுத்து அய்வு செய்தனர்.
அந்த ஆய்வின் முடிவை ஒப்பிட்டு பார்க்கும் போது, நாய்களின் முடிகளில் இருந்ததைவிட, ஆண்களின் முடிகளில் அதிக கிருமிகள் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரியாஸ் கட்ஜீட் கூறுகையில், "தாடி வைத்திருக்கும் ஆண்களிடம், நாய்களைவிட அதிக கிருமிகள் இருக்கிறது என்பது எங்கள் ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்தது. எனவே, தாடி வைத்திருக்கும் ஆண்களை ஒப்பிடும் போது, நாய்களே தூய்மையானவை என எடுத்துக்கொள்ளலாம்", என்றார்.
இந்த ஆராய்ச்சி முடிவு குறித்து கருத்து தெரிவித்த தாடி ஆர்வலர் கேத், "மனிதனின் கை மற்றும் முடியை எடுத்து ஆராய்ந்தால் நிறைய அசிங்கமான விஷயங்கள் அதில் இருப்பது தெரியவரும். தாடி வைத்திருப்பது அசுத்தமானது என நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். தாடியை பற்றி நிறைய கெட்டக் கதைகள் சொல்லப்பட்டு வருவதால், இதுபோன்ற மனநிலை ஏற்படுகிறது", எனக் கூறுகிறார்.
இந்த கட்டுரையை படித்து முடித்த பிறகு உங்கள் தாடியை ஷேவ் செய்யலாம் என்ற யோசனை வந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications