அமைச்சர்களை தொடர்ந்து அதிகாரிகளுக்கும் ஜாக்பாட்... வெளிநாடுகளுக்கு பறக்க ஆயத்தம்
சென்னை: முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வந்ததை போல், துறை சார்ந்த உயரதிகாரிகளும் வெளிநாடு டிரிப் செல்ல உள்ளார்களாம்.
தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு முதலீட்டாளர்களை அழைக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா, துபாய், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வந்தார். அவருடன் தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் உயரதிகாரிகள் பலர் சென்றிருந்தனர். அதைத்தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அமெரிக்கா சென்று வந்தார். இவர்களை போலவே அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், வேலுமணி, எம்.சி.சம்பத், உதயகுமார், ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட பலர் ஆஸ்திரேலியா, எகிப்து, என சென்று வந்தனர்.

இந்நிலையில் தமிழக பொதுப்பணித்துறை, கல்வித்துறை உயர் அதிகாரிகள் இப்போது வெளிநாடு செல்வதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். அரசு செலவில் அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு பறந்து திரும்பிய நிலையில், இப்போது அதிகாரிகளுக்கும் அந்த யோகம் கிட்டியுள்ளது. முதற்கட்டமாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆஸ்திரேலியா செல்லவிருக்கின்றனர். அங்குள்ள பாரம்பரிய கட்டிடங்களை பராமரிக்கும் முறைகள் பற்றி அறிந்து கொள்வதற்காக இந்த பயணத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் பாரம்பரிய முறையில் உருவாக்கப்படும் கட்டிடங்கள் மற்றும் அதன் பராமரிப்பு முறைகள் பற்றி அறிந்துகொள்வதற்காக பொதுப்பணித்துறையின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் குழு விரைவில் ஆஸ்திரேலியா செல்கிறது. இதனிடையே கல்வித்துறை உயர் அதிகாரிகள் குழுவும் பின்லாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று அங்குள்ள கற்பிக்கும் முறை பற்றி அறிந்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்னும் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வருடமே உள்ள நிலையில் இப்போதே வெளிநாடு பயணங்களை முடித்துக்கொள்ள அதிகாரிகள் தரப்பிலும் ஆர்வம் காட்டப்படுகிறது.
ஆஸ்திரேலியா நாட்டின் அரசு பொதுப்பணித்துறை பொறியியலாளர்கள் விடுத்த அழைப்பின் பேரிலேயே தமிழக பொதுப்பணித்துறை பொறியியலாளர்கள் அங்கு செல்வது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications