சென்னை கே கே நகரில் சாலையில் 20 அடி ஆழ பள்ளங்கள்.. சிக்கியது டெம்போ டிராவலர் வாகனம்!
சென்னை: சென்னை கே கே நகரில் மிகப் பெரிய அளவில் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் அதில் டெம்போ டிராவலர் வாகனம் ஒன்று சிக்கியுள்ளது.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மிக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு பெரு வெள்ளத்திற்கு பிறகு மிக அதிக மழை ஞாயிற்றுக்கிழமை சென்னையில் பதிவானது.
இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. பல இடங்களில் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால் தரமின்றி கிடக்கும் சாலைகள் பெயர்ந்து கிடக்கின்றன.

பெருமளவில்
இந்த நிலையில் சென்னை கே.கே. நகரில் மழையால் பல இடங்களில் பெருமளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. நேற்று இரவு காமராஜர் சாலை மற்றும் அண்ணா மெயின் ரோடு ஆகிய இடங்களில் மிகப் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அவ்வாறு ஏற்பட்ட ஒரு பள்ளத்தில் அங்கு நின்றிருந்த டெம்போ டிராவலர் வாகனம் சிக்கிக் கொண்டது.

20 அடி ஆழம்
இந்த பள்ளங்கள் 20 அடி ஆழம் வரை இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். ஒவ்வொரு மழையின் போதும் இத்தகைய சிரமங்களை சந்திப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில் காமராஜர் சாலை மற்றும் அண்ணா மெயின் ரோடு சாலைகளில் மெட்ரோ குடிநீர் பணிகளுக்காக பைப் புதைக்கும் பணிகள் அண்மையில்தான் நடந்து முடிந்தன.

மெட்ரோ வாரியம்
பள்ளத்தை மூடி சாலையை அமைத்துக் கொள்ளுமாறு கடந்த வாரம்தான் மெட்ரோ குடிநீர் வாரியம் எங்களுக்கு ஆட்சேபமில்லா சான்றை அளித்தது என்கிறார். அது போல் இதுகுறித்து மெட்ரோ குடிநீர் அதிகாரி ஒருவர் கூறுகையில் 20 அடி குழிகளை தோண்ட நாங்கள் பெரும் பாடுபட்டோம். பள்ளத்தில் இருந்த பைப்லைன்கள் எல்லாம் மிக மோசமாக இருந்தன.

காயமடையவில்லை
அவற்றை நாங்கள் மாற்றிவிட்டோம். ஆனால் அதில் சில கசிவுகள் உள்ளன. அதை விரைவில் சரி செய்துவிடுவோம். இதுவரை யாருடைய உயிருக்கும் எந்த ஆபத்தும் நேரவில்லை, யாரும் காயமடையவில்லை என்றார் அந்த அதிகாரி. இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில் ஒவ்வொரு முறையும் இதே சிரமத்தை நாங்கள் அனுபவித்து வருகிறோம். இந்த பள்ளங்கள் மிகவும் ஆபத்தானவையாக உள்ளன. அவை 20 அடி ஆழம் கொண்டவைகளாக உள்ளன. இதற்கு நிரந்தர தீர்வை அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றார்.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications