ஆதார் கார்டில் திருத்தம் பண்ணனுமா.. இனி அலைய வேண்டியதில்லை.. UIDAI கொண்டுவரும் சூப்பர் வசதி!
சென்னை: ஆதார் கார்டில் (Aadhaar card) திருத்தங்களை இனி வீட்டில் இருந்தபடியே மேற்கொள்ளும் வகையில் ஆதார் இ செயலி சேவை கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த இ-ஆதார் செயலி அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த இ-ஆதார் செயலி மூலம் பயனர்கள் முக்கியமான தகவல்கள், அதாவது பெயர், குடியிருக்கும் வீடு உள்ளிட்ட தகவல்களை கூட ஸ்மார்ட்போனில் இருந்தே அப்டேட் செய்ய முடியும்.
இன்று ஒவ்வொரு இந்தியரின் அடையாளமாக ஆதார் கார்டு விளங்குகிறது. வீட்டு முகவரி முதல் டிக்கெட் புக்கிங் செய்வது வரை எல்லாவற்றிற்கும் ஆதார் முக்கிய ஆவணமாக தேவைப்படுகிறது. அரசு சேவைகள் பெற விண்ணப்பிப்பதற்கும், உதவித் தொகை பெறுவதற்கும் முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை பயன்படுகிறது.

எனினும் சில நேரங்களில் குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) பெறுவதற்கும் இப்போது ஆதார் கார்டு கேட்கப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் குடும்ப அட்டையில் உள்ள முகவரி போல் இல்லாமல், ஆதார் கார்டில் வேறு முகவரி இருந்தால் அதனை திருத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கு நாம் குடும்ப அட்டையை ஆதாரமாக கொண்டு திருத்தம் செய்யலாம்.
இதேபோன்று ஆதார் அட்டையில் பெயர் மாற்றம், வயது மாற்றம், இருப்பிடம் மாற்றம், திருமண நிலை என அவ்வப்போது சில மாற்றங்களை செய்ய வேண்டிய தேவை உள்ளது. ஆதார் சேர்க்கைக்காக தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி தலைமையகங்கள், நகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்களில் பி.இ.சி மையங்களை ELCOT நிறுவியுள்ளது.
இங்கு சென்று அதற்கான ஆவணங்களை கொடுத்து மாற்றம் செய்து கொள்ளலாம். பின்பு மாற்றம் செய்யப்பட்ட ஆதார் கார்டு, விண்ணப்பித்த 2 வாரங்களுக்குள் வீட்டிற்கு வந்துவிடும். எனினும் செல்போனிலோ, ஆன்லைனிலோ தனிநபரால் இந்த மாற்றங்களை செய்யும் வசதி இன்னும் கொண்டு வரப்படவில்லை. இந்த நிலையில் தான் ஆதார் கார்டுகளில் மாற்றங்கள் செய்ய வேண்டும் 'ஆதார் இ-செயலி' கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக, இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த இ-ஆதார் செயலி அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த இ-ஆதார் செயலி மூலம் பயனர்கள் முக்கியமான தகவல்கள், அதாவது பெயர், குடியிருக்கும் வீடு உள்ளிட்ட தகவல்களை கூட ஸ்மார்ட்போனில் இருந்தே அப்டேட் செய்ய முடியும்.
ஆதார் மையங்களுக்கு நேரில் சென்று மக்கள் அலைவதை தவிர்க்கும் விதமாக இந்த வசதியை கொண்டு வர, ஆதார் ஆணைய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். நவம்பர் 2025 முதல் பயோமெட்ரிக் தகவல்களை உறுதிப்படுத்த மட்டுமே மக்கள் ஆதார் மையங்களுக்கு நேரில் செல்வது போல இருக்கும்.
இதர அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலமே கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. ஆதாரில் திருத்தம் மேற்கொள்ள பயனர்கள் வரும் போது அடையாள மோசடி நடப்பதை தடுக்கும் வகையில், விரைவாக சேவை கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக இந்த வசதியை கொண்டுவர தனித்துவ அடையாள ஆணையம் முடிவு செய்துள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications