உதயநிதியை இனி சின்னவர்னு கூப்பிடுவோம்.. அன்பில் மகேஷ் பொய்யாமொழி
சென்னை: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை இனி சின்னவர் என அழைப்போம் என எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
சென்னை அன்பகத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மீது அடுக்கடுக்கான புகார்களை வாசித்தனர்.

ஏற்கனவே மாவட்ட செயலாளர்கள் பலரும் உதயநிதி நியமனத்தை ரசிக்கவில்லை. இதனால் அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் மாவட்டங்களுக்கு வருகிறேன்..அந்தந்த மாவட்ட செயலாளர்களை நேரில் சந்திக்கிறேன் என உறுதி அளித்திருக்கிறார் உதயநிதி.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அன்பில்மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ, தலைவரை பெரியவர் என அழைத்துவருகிறோம். இனிமேல் உதயநிதியை சின்னவர் என்றே அனைவரும் அழைக்க வேண்டும் என்றார்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பேச்சுக்கு உதயநிதியும் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications