3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பற்றி நடிகர் கார்த்தி ட்வீட்.. 'கடைகுட்டி சிங்கம்' கருத்து என்ன தெரியுமா?
சென்னை: 3 விவசாய சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பதை, நடிகர் கார்த்தி வரவேற்றுள்ளார்.
Recommended Video
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 9 மணிக்கு தொலைக்காட்சிகளில் தோன்றி நேரலையில் நாட்டு மக்களிடையே உரையாற்றினார் . அப்போது கடந்த வருடம் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு மிகவும் நன்மை பயக்கக் கூடியது என்ற போதிலும் கூட ஒரு பிரிவினருக்கு அதை புரியவைக்க முடியவில்லை என்பதால் மூன்று விவசாய சட்டங்களையும் வாபஸ் பெறுகிறோம் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். டெல்லி எல்லையில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகள் ஜிலேபி உள்ளிட்ட இனிப்பு கொடுத்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இருவேறு கருத்துக்கள்
காங்கிரஸ் தலைவர்கள் இது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி , அரசுக்கு கிடைத்த தோல்வி என்று கூறி வருகிறார்கள். ஆனால் உத்தரபிரதேசம் , பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வருவதால் இதை ஒரு ராஜதந்திர நடவடிக்கை என்று பாஜக ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். இவ்வாறு இருவேறு கருத்துக்கள் நிலவி வரும் நிலையில் நடிகர் கார்த்தி தனது கருத்தை டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

கார்த்தி ட்வீட்
மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரையை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும். இவ்வாறு கார்த்தி கூறியுள்ளார்.

கடைக்குட்டி சிங்கம்
கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் விவசாயியாக நடித்தவர் கார்த்தி. தனது மோட்டார் சைக்கிளில் விவசாயி என்று எழுதி வைத்திருப்பார் . வேறு தொழில் செய்பவர்கள் இவ்வாறு பெயர் பலகை வைத்துக் கொண்டு வண்டி ஓட்டுகிறார்கள் விவசாயிகள், பிறருக்கு சோறு போட்டு வாழ வைப்பவர்கள். எனவே பெருமிதத்துடன் இப்படி எழுதி வைக்கலாம் என்று அந்தப் படத்தில் அவர் கூறியிருந்தார் . இதன்பிறகு கிராமப்புறங்களில் பல இளைஞர்கள் இதுபோல தங்கள் இருசக்கர வாகனங்களில் விவசாயி என்று எழுதிக் கொண்டு வண்டி ஓட்டுவதை பார்க்க முடிகிறது.

சூர்யா கருத்துக்கள்
நடிகர் கார்த்தி அண்ணன் நடிகர் சூர்யா பல்வேறு சமுதாய கருத்துகளை கூறி வருபவர். திரைப்படங்களிலும் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். காப்பான், என்.ஜி.கே உள்ளிட படங்கள் இதற்கு உதாரணம். ஒரு பக்கம் ஜெய்பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக பாஜக, பாமக உள்ளிட்ட பிரமுகர்களால், தொடர்ந்து சூர்யா விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார் . இந்த நிலையில் மத்திய பாஜக அரசு எடுத்துள்ள முடிவு தொடர்பாக நடிகர் கார்த்தி ட்வீட் வெளியிட்டுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications