வானதி சீனிவாசனிடம் தோற்ற காண்டு மொத்தத்தையும் lyricsல இறக்கிட்டாப்ல கமல்:'விக்ரம்' குறித்து கஸ்தூரி
சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் பாடிய ஒன்றிய பாடல் குறித்து நடிகை கஸ்தூரி தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்துள்ள படம் விக்ரம். இதன் இயக்குநர் லோகே கனகராஜ். திமுக எம்.எல்.ஏ.வும் அக்கட்சியின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் விக்ரம் திரைப்படத்தை வெளியிட உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியிடப்படுகிறது. .

இந்த பின்னணியில் விக்ரம் படத்தில் ஒரு பாடலின் முதல் சிங்கிள் இன்று வெளியிடப்பட்டது. பத்தல பத்தல என்ற பாடலை கமல்ஹாசன் எழுதியுள்ளார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். அதிலும் ஒன்றிய அரசு என குறிப்பிட்டு பாடல் எழுதியுள்ளார் கமல்ஹாசன்.

இதில்,
கஜானாலே காசில்லே!
கல்லாலையும் காசில்லே!
காய்ச்சல் ஜூரம் நிறைய வருது தில்லாலங்கடி தில்லாலே!
ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே!
சாவி இருடன் கையில தில்லாலங்கடி தில்லாலே!
என நீள்கிறது வரிகள்.
இந்த பாடல் இப்போது அரசியல் விவாதமாகிவிட்டது. திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும்தான் ஒன்றியம் என்ற சொல்லை பயன்படுத்துகின்றன. இப்போது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் ஒன்றியம் என்ற சொல்லை தனது சினிமாவில் பயன்படுத்தி இருக்கிறார்.
இது தொடர்பாக நடிகை கஸ்தூரி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
சகலகலாவல்லவன்+மார்க்கண்டேயன் = கமல்
வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் lyricsல இறக்கிட்டாப்ல.
ஒன்றியம் ங்குற ஒத்தை வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல.
கூட்டணி ஆட்சியில இல்லைனாலும் படக்காட்சியில வந்துருச்சு!
இவ்வாறு நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.
அப்புறம் என்ன! வழக்கம் போல விடிய விடிய கச்சேரிதான் ட்விட்டரில்!












Click it and Unblock the Notifications