திமுகவில் திருப்தி இல்லை... அதிமுகவில் இணைந்த நடிகர் ராதாரவி பேட்டி
Recommended Video
சென்னை: அதிமுகவில் நான் 18 ஆண்டுகளாக இருந்துள்ளேன் ஆனால், திமுகவில் எனக்கு திருப்தி இல்லை என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் நடிகர் ராதாரவி இணைந்தார். ராதாரவி அதிமுகவில் இணைந்த போது, அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனிருந்தார்.

திரையுலகில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி பல விமர்சனங்களை எதிர்கொண்டிருப்பவர் நடிகர் ராதாரவி. சமீபத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் ராதாரவி, நயன்தாராவை பற்றி இரட்டை அர்த்தத்தில் பேசியது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது
மூத்த நடிகரான ராதாரவியின் பேச்சுக்கு திரைத்துறையினர் பலரும், சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். இதன் எதிரொலியாக, தி.மு.க., விலிருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வருவதாலும் தி.மு.க., விலிருந்து ராதாரவி தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
இந்தநிலையில், முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் நடிகர் ராதாரவி இணைந்துள்ளார். இதை அதிமுக, அதிகாரப்பூர்வ அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது. அதிமுகவில் இணைந்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் நான் 18 ஆண்டுகளாக இருந்துள்ளேன். ஆனால், திமுகவில் எனக்கு திருப்தி இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications