விஜய்க்கு போனை போட்டு நடிகர் சஞ்சீவ் சொன்ன 2 வார்த்தைகள்! அதுக்கு மேல பேசினால் கோபம் வந்துடுமாம்!
சென்னை: கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் எப்படி இருக்கிறார் என்பது குறித்து அவருடைய நண்பரும் நடிகருமான சஞ்சீவ் விளக்கியுள்ளார். மேலும் விஜய்யுடன் தான் போனில் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் எப்படி இருக்கிறார் என்பது குறித்து அவரது சிறு வயது நண்பனான சஞ்சீவ் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "யாராக இருந்தாலும் இத்தனை உயிர்கள் போன பிறகு மிகவும் வருத்தமாக இருக்கும். விஜய் இப்போது மிகவும் வருத்தத்தில் இருக்கிறார்.

தன்னை பார்க்க வந்தவர்களுக்கு இப்படி ஆகிவிட்டதே என அவர் மனதில் மிகவும் வலியுடன் உள்ளார். நான் விஜய்யிடம் பேசினேன். இந்த நிலையில் என்னதான் ஆறுதல் சொன்னாலும் கோபம் வந்தாலும் வந்துவிடும். ஆகவே நான் எந்த ஆறுதலையும் சொல்லாமல் உடம்பை பார்த்துக் கொள், கடவுளை நம்பு என்று மட்டும் சொல்லிவிட்டேன்" என சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.
விஜய் ஏன் பிரஸ்ஸை சந்திக்கலை
அது போல் சஞ்சீவ் கலந்து கொண்ட ஒரு பிரஸ் மீட்டில், "விஜய் ஏன் பிரஸ்ஸை சந்திப்பதே இல்லை, அவருக்கு என்ன பயமா" என கேட்டதற்கு, சஞ்சீவ், "அண்ணே ஏன் இப்படி கேக்குறீங்க, அவருக்கு என்ன பயம், சரியான நேரம் கிடைக்கும் போது அவர் நிச்சயம் உங்களை சந்திப்பார்" என பதிலளித்தார். மேலும் தொடர்ந்து விஜய் குறித்த கேள்விகளுக்கு, சினிமா நிகழ்வு குறித்த இந்த பிரஸ்மீட்டில் இது குறித்து வேண்டாமே என்றும் சஞ்சீவ் தெரிவித்தாராம்.
பிரச்சாரக் கூட்டம்
தவெக பிரச்சார கூட்டம் கடந்த மாதம் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலையில் சம்பவம் நடந்து 3 நாட்கள் கழித்து விஜய் வீடியோ வெளியிட்டிருந்தார்.
வருத்தமோ மன்னிப்போ கேட்கவில்லை
ஆனால் அந்த வீடியோவில் வருத்தமோ மன்னிப்போ கேட்கவில்லை. மேலும் தன்னை பார்க்க வந்துதான் இந்த சம்பவம் நடந்தது என்று கூட அவர் சொல்லாமல் அந்த குற்றச்சாட்டை வேறு யார் மீதோ திணிக்க முயற்சித்தார்.
33 குடும்பத்தினரிடம் வீடியோ கால்
இந்த நிலையில் விஜய் தற்போது 33 குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசியுள்ளார். அந்த குடும்பத்தினரிடம் விஜய் பேசிய போது உடைந்து அழுதுவிட்டாராம். மேலும் தன்னை பார்க்க வந்து இப்படி ஆகிவிட்டதே என அவர்களிடம் வருத்தத்தை தெரிவித்தாராம். ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரோ விஜய்க்கு ஆறுதல் தெரிவித்தனராம். தாங்கள் இருக்கிறோம், தைரியமாக இருங்கள் என்றனராம்.
சந்திப்பேன்
மேலும் தான் விரைவில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பேன் என்றும் அவர்களிடம் விஜய் வாக்கு கொடுத்ததாக சொல்லப்படுகிறது. நேரில் செல்லும் போது விஜய் தான் அறிவித்த நிவாரணமான தலா ரூ 20 லட்சத்தை கொடுக்கக் கூடும் என தெரிகிறது. கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் கரூர் செல்ல விஜய் அனுமதி கேட்டு டிஜிபி அலுவலகத்திற்கு மெயில் அனுப்பியுள்ளார். கிட்டதட்ட 12 நாட்களுக்கு மேலாகியும் நீலாங்கரை வீடு, பட்டினம்பாக்கம் இல்லத்தை தவிர விஜய் வேறு எங்கும் பயணிக்காமல் இருந்து வருகிறார். தனக்கு நெருங்கிய நண்பர்களிடம் மட்டும் பேசி வருகிறாராம். மேலும் கட்சியில் முக்கிய பணிகளை ஒற்றை ஆளாக இருந்து கவனித்துக் கொள்கிறார் என்கிறார்கள். பிரச்சினை என வந்ததும் விஜய்யை விட்டுவிட்டு புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்டோர் பதுங்கியுள்ளது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
-
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
சினிமாவை விடுங்க.. அரசியலிலும் ரஜினியை காப்பி அடிக்கும் விஜய்? கட்சி நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங் -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
புதுவையில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மாஜி பாஜக அமைச்சருக்கு சீட் கொடுத்த விஜய்.. முழு லிஸ்ட் -
TVK Vs AVK.. விஜய்க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்.. ஆரம்பத்திலேயே தடாலடி சவால் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம் -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி












Click it and Unblock the Notifications