சூர்யாவின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.. ஆனால்.. சமக தலைவர் சரத்குமார் சொன்ன 'அடடே' பதில்
சென்னை: புதிய கல்விக்கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்தில் தனக்கு உடன்பாடில்லை என்று நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா அண்மையில் புதிய கல்விக்கொள்கை குறித்து 10 கேள்விகள் எழுப்பி ஆவேசமாக பேசியிருந்தார். இவரது கருத்துக்கு நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும கமல் ஹாசன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேபோல் சீமான் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சூர்யாவின் கருத்தல் தனக்கு உடன்பாடு இல்லையென தெரிவித்துள்ளார்.
சென்னை, ராஜீவகாந்தி சாலை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில், கல்லீரல் நோய்க்கான புதிய மருத்துவ மையத்தை சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சி முடிந்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய கல்விகொள்கை குறித்து நடிகர் சூர்யாவின் கருத்தில் தனக்கு உடன்பாடில்லை என்று கூறினார். காமராஜர் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கான பணியில் ஈடுபட்டிருந்ததால், புதிய கல்விக்கொள்கை பற்றிய கஸ்தூரி ரங்கனின் அறிக்கையை முழுவதுமாக படிக்கவில்லை என்று தெரிவித்தார். கல்விக் கொள்கையை உருவாக்க கஸ்தூரி ரங்கன் போன்ற பலரின் முயற்சிகள் இருப்பதாகவும், கஸ்தூரி ரங்கனின் அறிக்கையை முழுவதுமாக படித்ததும், தனது கருத்தினை ஒரு வாரத்தில் வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications